எழுத்துக்களின் முன்னோடி முத்திரைகள் – எண்ணும் எழுத்தும்

கியூனிஃபார்ம் எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்னரே, பண்டைய மெசபடோமிய மக்கள் கி.மு. 8000 முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பொருட்கள் மற்றும் எண்ணிக்கையைக் குறிக்க களிமண் முத்திரைகளைப் பயன்படுத்தினர். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தபோது, இந்த முத்திரைகளின் பயன்பாடும் விரிவடைந்தது. ஆரம்பத்தில் விவசாயப் பொருட்களைக் கணக்கெடுக்கப் பயன்பட்ட இவை, பின்னர் நகர்ப்புற வளர்ச்சி காரணமாக தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களையும் நிர்வகிக்க…

பண்டைய அமெரிக்காவில் பூஜ்ஜியம் – எண்ணும் முடுச்சும் – எண்ணும் எழுத்தும்

இன்றும் குல தெய்வங்களுக்கும் நாம் ஏதாவது நேர்ந்துகொண்டு அதனை நினைவில் வைத்துக்கொள்ள சேலையில் முடிச்சு போடும் வழக்கமும், காசு முடிந்து வைத்துக்கொள்ளும் வழக்கும் இன்றும் நம்மிடையே உண்டு. இரகசியங்களை அறிந்து கொள்வதை என்பதை மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது என நாம் கேட்டிருப்போம். முடிச்சுகளும் ஒரு காலத்தில் கருத்துக்களை எண்களை வெளிப்படுத்தும் கருவியாகவும், ரகசியக் கருத்துக்களை எண்ணங்களை…

மெசபடோமியாவில் எழுத்து தோன்றியதின் குட்டிக் கதை: ஏன், எப்படி, எதற்கு? – எண்ணும் எழுத்தும்

சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.மு. 3200-ல், மெசபடோமியா மக்கள் எழுத்தைக் கண்டுபிடித்தார்கள். இது பிறரைப் பார்த்து நகல் எடுத்தது அல்ல; அவர்களே உருவாக்கிய ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு. அதே நேரத்தில், எகிப்தியர்களும் தங்கள் சொந்த எழுத்து முறையை உருவாக்கினார்கள். இந்த இரண்டு நாகரிகங்களும், தகவல்களைப் பதிவுசெய்து பகிர்ந்துகொள்வதற்கான வழிகளைத் தேடியதால்தான் எழுத்து உருவானது.…

தோற்கருவி- இசைக்கருவி இலக்கணம்

தோற்கருவி- இசைக்கருவி இலக்கணம் பண்டைத் தமிழர் வாழ்வில் மிக முக்கிய இடம் பெற்ற தோற் கருவிகளுக்கு ஒரு தனி இலக்கணம் வகுத்துரைக்கப் பட்டுள்ளது. அனைத்துத் தாளக் கருவிகளுக்கும் முதன்மையாக விளங்கிய பறையின் முக்கியத்துவத்தை இசை நூலான பஞ்ச மரபு நூலில் வகுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டின் மூலம் அறியலாம். “ஓதிய கீத நிருத்த வழியிசையாய்ச் சோதியாய் நின்றியங்கு மம்முழவை…

ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியின மக்களின் வாழ்வும் மொழியும்

ஜவ்வாது மலை கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இம்மலையின் பெரும்பாலான பகுதிகள் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மாவட்டம் வட்டம், பரமனந்தலில் தொடங்கி, வேலூர் மாவ அமர்த்தியில் முடிவடையும். இம்மலையின் உயரம் 915 மீட்டராகும். கடல் மட்டத்திலிருந்து 1070 மீட்டர் உயரத்தில் உள்ள ஜவ்வாது மலையில் அமைந்துள்ள…

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி கிரேக்க மெய்யியல் அதன் தனித்துவமான அர்த்தத்தில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் மைலீசிய மரபிலிருந்து தொடங்குகிறது. இச்சிந்தனை மரபின் ஊற்று மிலிட்டசுக்கு உரியதாகும். ஆசியா மைனரின் கரையில் இருந்த சக்தியும் செல்வமும் மிகுந்த கிரேக்க நகரம் மிலிட்டஸ், பெரிய வணிகப் பாதைகள் சந்திக்குமிடமாகவும் வளமான வர்த்தகம் நடந்து கொண்டிருந்த நகரமாகவும் காணப்பட்டது. மிலிட்டஸோடு…

சிந்து சமவெளி சவால் – துர்காதாஸ் (ஆசிரியர்), ஜனனி ரமேஷ் (தமிழில்)

மேசிடோனியர்களும், கிரேக்கர்களும், மாவீரன் அலெக்ஸாண்டரும் இந்துகுஷ் மலைப் பகுதிக்கு வந்தனர். கடவுளின் பிரதேசம் என்று போற்றப்படுகிற, ஒலிம்பஸை விடவும் உயரமான காடுகள் நிறைந்த பனி படர்ந்த மலைப் பகுதிகள் அவர்களை மயக்கின. சிகரங்களுக்கு இடையே ஏற்படும் சூரிய உதயமும், அஸ்தமனமும் கண்களுக்கு ரம்மியமான காட்சியைத் தந்தன. வானத்தில் தேவர்கள் வசிக்கும் தேவலோகங்கள்; சொர்க்கத்தில் சிவனுக்குக் கைலாசம்,…

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும்

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்களையும், கட்டிடங்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், அண்மையில் இரண்டு வார கால சர்வதேச விழா ஒன்று நடைபெற்றது. எகிப்தில் பாயும் நைல் நதியில் கட்டப்படும் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்படும் போது, அந்நாட்டின் பல புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்கள் நீரில் மூழ்கிவிடும் என்பதால், அவற்றை…

கவறைச் செட்டி

எழுநூற்றுவர் யார் என்று விளக்கும் கல்வெட்டு திருவிடைமருதூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாலிங்கேஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, சோழர் காலத்தின் கலை, சமூகம், மற்றும் வணிக நடைமுறைகள் குறித்த அரிய தகவல்களைத் தருகிறது. கல்வெட்டின் தொடக்கம் சிதைந்திருப்பதால், எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் இது பொறிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. எனினும்,…

அரிக்கமேடா? வீராம்பட்டினமா?

அரிக்கமேடா? வீராம்பட்டினமா? இவ்வகழாய்வு ஆராய்ச்சியில், அகழ்வாய்விடத்தின் பெயர் “அரிக்கமேடா” அல்லது “வீராம்பட்டணமா” என்பது பற்றி அகழ்வாய்வு அறிஞரிடையே ஒருமித்த கருத்து இருந்ததில்லை. இவ்வகழாய்வில் பெரிதும் பங்கு கொண்ட ஃபொஷே முனிவர் (PERE FAUCHEUX) அவர்கள் “வீராம்பட்டணம் ” என்பதுதான் பொருத்தமான பெயர் எனக் கருதினார். அவர் கூறுவது யாதெனில்: “வீரபட்டணம்” அல்லது “வீராம்பட்டினம்” என்ற இவ்வகழாய்விடத்தைக்…