மணிமங்கலத்தின் தொண்டை மண்டல நவகண்டச் சிற்பங்கள் – வேலுதரன்

சமீப காலங்களில் ஒரு தலைவன் இறந்த பின்பு அவனுடைய அனுதாபிகள் தாங்களும் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொல்வதை ஊடகங்களின் வழியாக கேள்விப்பட்டு இருக்கின்றோம்.. இப்படியும் இருக்க முடியுமா என்று எண்ணத் தோன்றும். அனால் இதுவே சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாக பரணி போன்ற இலக்கியங்களில் நவகண்டமாகவும் / அரிகண்டமாகவும் சித்தரிக்கப்படுகின்றது. பல காரணங்களுக்காக ஒருவர் தன் தலையை…

வேலூரில் நாணயக் கண்காட்சி மகேஸ்வரி பாபு

நாணயங்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்துவருகின்றது. இந்த நாணயங்கள் அரசர்களின் காலங்கள் சங்ககால நாகரீகங்களை வெளிப்படுத்தும் காட்சியங்களாக அமைந்துள்ளன. நாணயங்கள் பல நூற்றாண்டு எனில் அஞ்சல் தலைகள் சில நூற்றாண்டுகளாக பல நாடுகளின் வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் சரித்திர சான்றுகளாகத் திகழ்கின்றன. தன்னார்வலர்கள் சரித்திர ஆர்வலர்கள் பொழுதுபோக்குக்கு என சிலர் நாணயங்கள் மற்றும் அஞ்சல்…

தமிழர் உணவு முனைவர். பிரின்ஸ் தாஸ்

மனிதன் உயிர் வாழ முக்கியமானது உணவாகும். ஆதி மனிதனின் முதல் தொழிலே உணவு தேடலாயிருந்தது ஆதிகால மனிதன் இயற்கையிலேயே கிடைத்த காய், கனி, கிழங்குகளை உண்டான். பின்னர் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் சதைப் பற்றுள்ள பகுதிகளைப் பச்சையாக உண்டான். தீயை உண்டாக்கக் கற்றுக் கொண்ட பின்னரே விலங்கு இறைச்சியைத் ‘தீ’ யில் வேகவைத்து பக்குவப்படுத்தி உண்ணத்…

சிதறிக் கிடக்கும் பாடல் பெற்ற ஸ்தலம் இராசு. சரவணன் ராஜா, வேலூர்

சென்னை வேலூர் நெடுஞ்சாலையில், 20 கி.மீ ராணிப்பேட்டைக்கு அருகில் நீவா நதிக் கரையில் பாடல் பெற்ற திருத்தலம் திருவல்லம் அமைந்துள்ளது. பல்லவர்கள், கங்கர்கள், பாணர்கள், சோழர்கள், விஜயநகர நாயக்கர்கள் எனப் பல அரசர்கள் நிவந்தனம் அளித்த மற்றும் பாடல் பெற்ற தலம் இது. திருவலம் கோயிலின் தெற்கே சுமார் 2 கி மீ. தொலைவில் கம்மராஜபுரம்…

தென்னிந்தியாவின் திபெத் – வேலுதரன்

கர்நாடக மாநிலத்தின் கொல்லேகாலம் அருகேயுள்ள திபெத் அகதிகளின் ஒரு குடியமர்வு (Dhondenling Tibetan Settlement) என் பார்வையில் இக்கட்டுரையில் காண்போம்.       சென்ற ஜனவரி மாதத்தில் இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்தில் மாண்டியா அருகே உள்ள சோழர்கள், கங்கர்கள் மற்றும் போசாளர்களால் கட்டப்பட்ட கோயில்களைக் காணச் சென்று இருந்தோம். கல்வெட்டுக்கள், கட்டிடக்கலை…

வழுதி கண்ட தென்காசி பெருங்கோபுரமும் – பொன் கார்த்திக்கேயன்

வரலாறு குறித்து தேடத் தொடங்கிய போது எங்கெல்லாமோ தேடி அலைந்துவிட்டு சொந்த ஊரில் வாளாவிருக்கிறோமே என்ற குறை அடிக்கடி இருந்துவந்தது. ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தூங்கி எழவே பொழுது சரியாயிருந்தது. இம்முறை எப்படியேனும் காசி கண்ட பெருமாள் பராக்கிரம பாண்டியனது சிற்பத்தையும் தென்காசிப் பாண்டிய இலச்சினை (இரட்டைக் கயல்) யையும் காண வேண்டுமென்ற…

கலைஞருடன் ஒரு சந்திப்பு – இராசு. சரவணன் ராஜா

நாம் செல்லும் ஆலய கோபுரங்களின் மேலே அமைந்த கலசங்கள், கருவறை வாயிற்படியிலும் பக்கத் தூணிலும் போர்த்தப்பட்டுள்ள வேலைப்பாடுடைய தகடுகள், கருவறையில் உள்ள திருமேனிகளை அலங்கரிக்கும் பொன், வெள்ளி அல்லது பித்தளையிலும் உள்ள கலசங்கள், பிரபை என்று சொல்லப்படுகின்றன. திருவாசி எனப் பல உலோகத்தில் ஆன உருவங்கள் நிச்சயம் நம் கண்ணில் தென்படும்.       …

உத்திரமேரூர் காஞ்சி பயணம் – ஐந்திணைக் காப்போம். சண்முகப் பிரியன்

எங்கள் பயணத்தின் முதல் இடமாக நாங்கள் தேர்வு செய்த ஊர் உத்திரமேரூர். பழைய கற்காலத்தை சேர்ந்த கல் திட்டை, வடவாயில் செல்வி எனும் பல்லவர்கால கொற்றவையின் பலகைக்கல் சிற்பம், ஐயனார், பராந்தக சோழன் காலத்தில் குடவோலை தேர்தல் முறை மற்றும் விதிகளை கூறும் கல்வெட்டு, த்ரி தள அஷ்டாங்க விமான அமைப்பு கொண்ட சுந்தர வரதராஜ…

மறுகால்தலை சமணர்படுகைகள் -ச.சு. நாகராஜன்

கடந்த வருடத்தின் கடைசி நாளின் மாலைப் பொழுது சமண படுக்கையில் வருடக் கடைசியிலாவது சயனிக்க எண்ணம். அதனால் நானும் தம்பி சோமேஷும் மாலை சரியாக 5 மணிக்குச் சித்த மருத்துவக் கல்லூரியை விட்டுக் கிளம்பினோம். நேரே முதல் தீர்மானம் நெல்லைச் சீமையின் சீவலபேரியை நோக்கியதாகப் பயணம். வேகப் பயணத்தை இளந்தென்றல் மட்டும் எங்களை வேவு பார்த்து…

பழந்தமிழர் துறைமுகம் முசிறி பட்டினம் பேராசிரியர். வேல்முருகன்

அமணன்’ என்கிற ஒற்றை தமிழ் சொல்லுக்குள் தமிழனின் பேரடையாளம் ஒளிந்து இருப்பதை முசிறி அகழாய்வு நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது. பண்டைய தமிழனின் நாகரீக எச்சங்கள் இன்றைய தமிழ் மண்ணில் மட்டுமின்றி உலகம் முழுக்க வியாபித்து கிடப்பதை இத்தகைய அகழாய்வுகள் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. உலக சாலைகள் எல்லாம் ரோம் நகரை நோக்கியே எனப்படும் சொலவடை போல் உலக…