தமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான ஓவியப் பாரம்பரியம் பற்றிய ஒரு தீர்க்கமான பயணத்தில் வாசகரை இந்நூல் இட்டுச் செல்கிறது. குடைவரை கோவில் ஓவியங்களும் மன்னர்கள் கட்டிய ஆலயச் சுவரோவியங்களும், ஆவணக் களரிகளில் மறைந்துகிடக்கும் சித்திரங்களும் பெயர் பெற்ற அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களும் இந்நூலின் பேசுபொருளாகின்றன. வரலாற்றின் பின்புலத்தில் இக்கலைப்படைப்புகள் விவரிக்கப்படுகின்றன. சில ஆலயங்களை அலங்கரித்திருந்த ஆனால் புனரமைப்பின் பெயரால் அழிக்கப்பட்டு விட்ட அரிய ஓவியங்களின் வண்ணப் படங்கள் இதில் இடம்பெறுகின்றன. பல்லாண்டு கால ஆழ்ந்த ஆராய்ச்சி, புகைப்படங்கள், கோட்டோவியங்கள் இந்நூலின் சிறப்பு.
Year: 2014
ISBN: 9789382033776
Page: 296
Format: Paper Back
Language: Tamil
Publisher:
காலச்சுவடு பதிப்பகம்