மறைக்கப்பட்ட வரலாறு: தமிழக அரசு உருவாக்கத்தில் வேட்டுவர்களின் பங்கு
நடுகல் வழிபாட்டிலிருந்து பேரரசர்கள் வரை – வேட்டுவர்களின் வீரமும், சமூக வளர்ச்சியும் இந்த நூலில் விரிவாகப் பேசப்படுகிறது.
இதுவரை வெளிவராத பல வரலாற்றுத் தகவல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகளின் ஆவணப் பதிவுகளுடன் இந்த நூல் உங்களை வியக்க வைக்கும்.
இந்த நூலில் நீங்கள் தெரிந்துகொள்ளப் போவது:
– வேட்டுவர்களின் ஆநிரை கவர்தல் மரபுகள்
– குலதெய்வ வழிபாட்டின் தோற்றம்
– கொங்கு மண்டல வேட்டுவ அரசர்களின் ஆட்சி
– சைவ சமய வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு
– அரசு உருவாக்கம் மற்றும் நிர்வாகத் திறன்கள்
இப்பனுவல், தமிழக வரலாற்றில் வேட்டுவர் குடியினர் அரசு உருவாக்கத்தில் ஆற்றிய பங்களிப்பை விரிவாக ஆராய்கிறது. தொல்காப்பியர் காலம் தொட்டே, ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல், எயில் காத்தல் போன்ற வீரச் செயல்களில் வேட்டுவர்கள் கொண்டிருந்த அஞ்சாநெஞ்சமும் தீரமும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வீரச் செயல்பாடுகளில் இன்னுயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நடுகல் வழிபாடு தோன்றியது. இது நாளடைவில் ஐயன் கருப்பணசாமி எனும் குலதெய்வ வழிபாடாக வளர்ந்து, போர்த் தெய்வமான கொற்றவையின் அம்சங்களையும் தன்னகத்தே இணைத்து, கொங்கு மண்டல வேட்டுவர்களின் தனிச்சிறப்பான வழிபாட்டு முறையாக நிலைபெற்றது.
சமூக நாகரிகம் வளரத் தொடங்கிய சூழலில், சிறுகுடித் தலைவர்கள் வேளீர், சிற்றரசர், அரசர், வேந்தன் என படிநிலைகளில் வளர்ச்சி அடைந்தனர். தமிழகம் சேர, சோழ, பாண்டிய, தொண்டை மற்றும் கொங்கு மண்டலங்களாகப் பிரிந்து, பேரரசுகள் தோன்றிய வேளையில், கொங்கு மண்டலத்தில் வேட்டுவ அரசர்கள் ஆட்சி செய்ததற்கான பல்வேறு கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்கள் வல்வில் ஓரி, அதியமான், கடிய நெடுவேட்டுவன், கண்டிரம் கோ பெருநள்ளி போன்ற வேட்டுவ அரசர்களைப் பற்றிய எண்ணற்ற தரவுகளைக் கொண்டுள்ளன.
திருப்பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமான், அல்லளா இளைய நாயகன், பல்லவராயன், அப்பிச்சிமார் காவியத் தலைவரான இராஜ இராஜேந்திர மாராயன் என்ற அப்பிச்சி மாராயன் போன்றோர் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த வேட்டுவ மரபின் மன்னர்களாவர். இவர்கள் சிறந்த சிவபக்தர்களாக விளங்கியதோடு, சைவ சமய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டனர் என்பதை இவர்களின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
வேட்டுவர் தொல்குடியினர் மொழி வளர்ச்சிக்கும், எழுத்து உருவாக்கத்திற்கும் (பாறை ஓவியங்கள் மூலம்) வித்திட்டனர். வானியல் சாத்திரங்கள், இரும்பு மற்றும் உலோக கண்டுபிடிப்புகள், போர்க்கருவிகளின் உருவாக்கம், விவசாயம் மற்றும் நீர் மேலாண்மையில் ஏற்படுத்திய புரட்சிகள் எனப் பல்துறைகளில் இவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அரசு உருவாக்கத்தின் மூலம் உணவு வழங்குதல், வரி வசூலித்தல், மக்களைப் பாதுகாத்தல் எனப் பன்முகத் தன்மையுடன் வேட்டுவர்கள் வாழ்ந்துள்ளார்கள்.
இவர்களின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் பங்களிப்புகளைத் தங்களது ஆய்வுக் கட்டுரைகள் மூலம் வெளிக்கொணர்ந்த அனைத்து ஆய்வாளர்களுக்கும் இந்நூல் நன்றியைத் தெரிவிக்கிறது. கன்னியாகுமரி முதல் வேங்கடம் வரை ஆட்சி செலுத்தியவேட்டுவ அரசர்கள் பற்றி பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் தங்களது கட்டுரைகளில் விளக்கப்படுத்தியுள்ளனர்.
தொகுதி 1 – பொருளடக்கம் :
1.பழங்குடியும் வேட்டுவர் வாழ்வும் – சு.கோபாலகிருஷ்ணன்
2.தொல்தமிழரின் வேலன் வெறியாட்டு வழிபாடு
மற்றும் சேயோன் வழிபாடு – ஓர் ஆய்வு – முனைவர் ப.மு.கண்ணன்
3.சங்க இலக்கியத்தில் வேட்டுவர் – முனைவர் மு.லோகநாயகி
4. ஜவ்வாது மலை – வேட்டுவ வழிபாடு – ஆசிரியர் க.ஜெய்சங்கர்
5. வேட்டுவர் வாழ்வும் ஆளுமையும் – முனைவர் கி.ராம்கணேஷ்
6.வேட்டுவர்களின் நீர் மேலாண்மை – ஆர். சுப்ரமணி
7.அந்துவன் ஆண்ட வடகரை நாட்டின் அந்தியூர் – ஏ.கே.
சந்திரசேகரன்
8.பாலைத் திணைக்குடியின் வேட்டுவர் வாழ்வியல் – முனைவர் ந. வெண்ணிலா
9.சங்க இலக்கியங்களில் வேட்டுவர் வாழ்வியல் – முனைவர் வ. மணிகண்டன்
10.சங்ககால வேட்டுவர் இனக்குழுச் சமூகம் – முனைவர் ந. அறிவரசன்
11. கல்வெட்டில் வேட்டுவர்கள் – பதிப்புத் தென்றல் புலவர் அ. பழனியப்பன்
12. சங்க இலக்கிய குறிஞ்சித்திணையில் வேட்டுவர்கள் வாழ்வியல் – தி. தருண்சர்மா
13. பெரியபுராணம் காட்டும் காளத்திமலை வேட்டுவர்களின் வாழ்வியலில் சங்ககாலப் பண்பாட்டு நீட்சி – ச.வாசுதேவன்
14. வீரமும் விருதும் பெற்ற வேட்டுவ சமுதாயம் – முனைவர்த.சங்கீதா
15. கொங்கு நாடும் வேட்டுவர் வரலாறும் – மு.காவ்யா
16. வேட்டுவ மக்களின் கலைக்கூறுகள் – திருமதி சு.சாந்தி
17. கண்ணப்பரின் சிவன் சிலை வடிவானவரே – காவடி மு.சுந்தரராஜன்
18. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் வேட்டுவ மக்களின் வாழ்க்கை வரலாறு – முனைவர் சு. சிவசந்திரகுமார். ம.சௌந்தர்யா
19. குற்றாலக் குறவஞ்சியில் வேட்டுவர் – பா.மோகனா
20. குறுந்தொகையில் வேட்டுவர்கள் – முனைவர் அ. ஸ்ரீ ஜனனி
21. கம்பர் காட்டும் வேடர்குலச் செம்மல் குகன் – முனைவர் சு. அட்சயா
22. நடுகல் : சோழர் காலமும் வேட்டுவர் கல்லும் – மு. சத்தியா
23. சங்க இலக்கியங்களில் வேட்டுவர் – திரு .மு .கோகுலசாமி
24. சங்க இலக்கியத்தில் வேடர்கள் – முனைவர் பெ.சங்குவதி
25. கருப்பொருள் மயக்கத்தில் வேட்டைத் தொழில் – ச. தென்பாண்டி
26. பன்னிரு திருமுறைகளில் வேட்டுவர் என்னும் சொல்லாட்சி – பு.அரவிந்தபிரகாஷ்
27. தலையநாடு – பட்டக்காரர்கள் வரலாறு – க.ஆண்டமுத்து வள்ளல்
28. அரசத் தொழில் செய்த தமிழ் வேட்டுவக்குடியினர் – ப.ஆனந்தகுமார்
29. இலக்கியத்திலும் ஆவணங்களிலும் வேட்டுவர் – த. ஐஸ்வர்யபிரதினா
30. குறுந்தொகைக் குறிஞ்சியில் வேட்டுவர் – சு.ஐஸ்வர்யா
31. சங்க இலக்கியத்தில் வேட்டுவர் – செ. கயல்விழி
32. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கடைபிடித்த கல்யாண நடைமுறைகள் – முனைவர்மு.கருப்புசாமி
33. புராணங்களில் வேட்டுவர் – வெ.கருப்பையா
34. சங்க இலக்கியம் காட்டும் வேட்டுவர் சமூகம் – ப.காவியா
35. பெரியபுராணத்தில் சேக்கிழார் காட்டும் வேட்டுவரின் வாழ்வியல் – ச. சந்தோஷ்குமார்
36.மலேசியாவில் வேட்டுவர்கள் – ச. சரவணன், டாக்டர். க.சுப்பிரமணியம்
37. அகநானூற்றில் வேட்டுவரின் தொழில்கள் – முனைவர் இரா.சிவகுமார்
38. நாட்டுப்புறவியலில் வேட்டுவர்கள் – த.சினேகா
39. சிலம்பில் காணலாகும் வேட்டுவர்களின் வாழ்வியல்
– முனைவர் பா.சீனிவாசன்
40. வேட்டுவக் கவுண்டரின் மகளிர் நிலை – கு. சுபத்ரா, பேரா. முனைவர் ம. சுந்தரமூர்த்தி
41. வேட்டுவக் குடிகளின் பெருமைகள் – முனைவர் கி. சுமித்ரா
42. சங்க இலக்கியங்களில் வேட்டுவர்கள் – மு.செல்வி
43. சங்க இலக்கியங்களில் வேட்டுவர் – சொல்லாக்கியன்
44. வேட்டுவக் கவுண்டர்களின் புழங்கு பொருள்கள்
– ர.தமிழ் தானூ. முனைவர்ம.சுந்தரமூர்த்தி
45. வேட்டுவரின் பரிணாமமும் சங்க இலக்கியமும்
– சு.தமிழ்ச்செல்வன்
46.பெரியபுராணத்தில் வேட்டுவரின் வாழ்வியல் – ச.திரிஷா
47. கம்பராமாயணத்தில் குகன் – முனைவர் ச.திவ்யபாரதி
48. வேட்டுவரின் புலம் பெயர்வும் வாழ்வியலும்
– இரா. நிவேதா
49. இலக்கியங்களில் வேட்டுவர் – ப.நிவேதா
50. பழங்குடி வேட்டை வாழ்வியலில் பகிர்வுப் பண்பாடு
– முனைவர்வே. நெடுஞ்செழியன்
51. பக்தி இலக்கியங்களில் வேட்டுவர்
– புலவர் சோணா மதியழகன்
52. சங்க இலக்கியங்களில் வேட்டுவர் வாழ்வியல்
– முனைவர் கொ.பரிமளம்
53. புறநானூறு கூறும் வேட்டுவக் கடையெழு வள்ளல்களின் வீரம் – செ. பிரபாகர்
54. வேட்டுவக் குலத்தின் பிரிவுகள் ஒரு பார்வை
– முனைவர் ஏ. பிரேமா
55. குறிஞ்சிக்கலியில் வேடுவர் – ம.ரஞ்சிதா
56. இலக்கியங்களில் வேட்டுவர் தொழில்கள் – முனைவர் மா.ரமாதேவி. திருமதி. சு. ஈஸ்வரி
57. கம்பராமாயணத்தில் வேட்டுவர்கள் – செ.லைலா
58. புறநானூற்றில் வேட்டுவர் – இரா.விக்னேஷ்
59. படைவீடு – நடுகற்களில் வேட்டுவர் வாழ்வியல்
– பா.விஜய்
60. நற்றிணையில் வேட்டுவர் வாழ்வியல்
– வெ.விஷ்ணு, முனைவர் இரா.சிவகுமார்
61.தொல்குடி வேட்டுவர்களின் வரலாறும் வாழ்வியலும்
– முனைவர் சொ. அருணன்
62. திருமுருகாற்றுப்படையில் வேட்டுவர் வழிபாடு – செல்வி ம.கங்கா
63. தொல்குடி வேட்டுவர்களின் இன்றைய நிலை – ஞா. பூமிகா
64. சிலப்பதிகாரத்தில் வேடுவர் – முனைவர் அ. யோகேஸ்வரி
65. குறிஞ்சிநில வேட்டுவ மக்களின் உணவுகள் – சி. ஜீவா
66. குறவஞ்சியும் வேட்டுவர் வாழ்வும் – முனைவர் ப.ஜெயசெல்வி
67. ஐங்குறு நூற்றுக்குறிஞ்சித் திணையில்
வேட்டுவர் வாழ்வியல் – ஆ. பாண்டிச் செல்வி
தொகுதி 2 – பொருளடக்கம் :
1. சைவ இலக்கியங்களில் வேட்டுவர்கள் – புதுவைக் கலைமாமணி செல்லூர் கண்ணன்
2. குறிஞ்சித் திணை வேட்டுவர்களின் மலை சார்ந்த உணவாதாரம் – வே.அரிகிருஷ்ணன்
3. வேட்டுவரின் புழங்குபொருள் பண்பாடு – ரா. நித்யாதேவி
4. நற்றிணை முல்லைத் திணைப் பாடல்களில் வேட்டுவர் – முனைவர் ச.முரளி
5. திருக்குற்றாலக் குறவஞ்சியில் வேட்டுவர் – மு.சுவேதா
6. சிலப்பதிகாரத்தில் வேட்டுவர் – ஏ.கிருபாகணேஷ்
7. ASTUDY OF TRIBALAND HUNTER GATHERER’S LIFE – D. A. MEENAKSHI SUNDARAM
8. The Vettuvar Community: An Anthropological Exploration of Culture, History, and Identity – G SOWPARNIKA
9. சங்க இலக்கியத்தில் வேட்டுவன் – முனைவர் ஜா.கீதா
10. சங்க இலக்கியம் காட்டும் வேட்டுவர்களின் தொழில்நுட்ப ஆளுமை – முனைவர் ஜா. கிரிஜா
11. வேட்டுவர்குல மெய்யடியார்களும் அவர் தம் மெய்யுணர்வுகளும் – முனைவர் சி. உமா சாரதா
12. பெரியபுராணத்தில் வேடர் வாழ்வியல் – முனைவர் யாழ். சு. சந்திரா
13. சிலப்பதிகாரம் வேட்டுவவரி காட்டும் வேட்டுவரின் வாழ்வியல் – முனைவர் ஜெ.சுந்தரபாண்டியன்
14. இலக்கியங்களில் வேடுவர்களின் வாழ்வியல்
– முனைவர் சு. காளீஸ்வரி
15. கரூர் மாவட்ட வேட்டுவர் நடுகற்கள் – பெ.இராமலிங்கம்
16. வரலாற்றுப் பெட்டகத்தில் வேட்டக்குடி – முதுமுனைவர் மு.தெய்வேந்திரன்
17. வேட்டுவர் வணங்கும் தெய்வங்களின் வரலாறும் வழிபாடும் – வீ.கோவிந்தராஜ். பொ.திருநாவுக்கரசு,
18. கொங்கு நாட்டு ஆவணங்களில் வேட்டுவர்கள்
– எம்.ராஜலிங்கம்
19. வேட்டுவர் என்னும் தொல்குடியினரின் கொடைகள்
– சௌ.சந்தானகிருஷ்ணன்
20. வேட்டுவர்களும் அவர்களின் வாழ்க்கை நிலையும்
– முனைவர் கு.பிரபாகரன்
21. வரலாற்றில் வேட்டுவர்களின் வாழ்வியல் – ச. செந்தில்குமார்
22. கொங்கு நாடும் வேட்டுவர் வரலாறும் – பா. கமலவேணி எம்.ஃபில்
23. நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வரலாறும்.
– வழிபாடும் – முனைவர் ப.சசிகலா
24. இலக்கியத்தில் வேட்டுவர் வரலாறு – ஓர் ஆய்வு
– முனைவர் க.சந்தானம்
25.வேட்டுவர்குல வரலாற்று இலக்கியங்களின் செம்பதிப்புத் தேவை – முனைவர் கா. திருநாவுக்கரசு,
சு. விக்னேஷ்
26. பெருமைமிகு வேட்டுவர் சில நினைவுகள் – பேராசிரியை ஆர்.தமிழ்ப்பொன்னி
27. வேட்டுவ மாதரின் இறைப்பணிகள் – செல்வி இ.பிரதிக்ஷா
28. வேட்டுவக் குடியினரின் சிறப்புகள் – புலவர் ப. எழில்வாணன்
29. வேட்டுவக் கவுண்டர் குலமும் குலதெய்வமும்
– எம்.சிவானந்தம்
30 வேட்டுவ அரசர் செயங்கொண்ட சோழ கொங்காள்வான் – மூ.விகாஷினி
31.வேட்டுவ அரசி – செம்பியன் மாதேவியாரின் கோயிற்கலைப் பணிகள் – வரலாற்றுச் சிற்பி பேராசிரியர் தங்கமணி
32. செப்பேட்டில் சைவ சமய வளர்ச்சியில் கொங்கு வேட்டுவஅரசர்களின் பங்களிப்பு – எம். செல்வராஜ்
33. கொங்குநாடும் வேட்டுவரின் வரலாறும்
– முனைவர் சி.குமாரசாமி
34.தொல்குடி வேட்டுவர்களின் தொடக்ககால வேளாண்மையும் தனித்துவமடைந்த நெற்பயிரும் – க. பிரவீன்குமார்
35.கோயில் கல்வெட்டுகள் சுட்டும் வேட்டுவர்கள்
– எஸ்.ரங்கசாமி
36. ராஜ வேட்டுவரின் யானைப்படை- மருத்துவர் வாழை பரமேஸ்வரன்
37. வேட்டுவ அரசரது தினமும் வேட்டுவர் தொலைக்காட்சியும் – எஸ். அர்ச்சுனன்
38. பட்டக்காரர்கள் – எம்.எம். நடராஜன்
39. வேட்டுவ அரசர்கள் வரிசை – ஈ.ராமசாமி
40. ராஜவேட்டுவர் – கவிதா வாழைபரமேஸ்வரன்
41. மதுரை புலிக்கவுண்டர் – முனைவர் வே.ப.சுதாமகேஸ்வரி
42. புலிக்குத்திக் கற்களில் வேட்டுவர் வீரமும் திறமும்
– வீ.குலோத்துங்கராயர்
43. வேட்டுவ அரசன் வல்வில் ஓரி – மா. முனுசாமி எம்.ஏ..
44. கரைய வேட்டுவன் – முனைவர் கா. காமராஜ்
45. இரும்பைக் கண்டறிந்தவர்கள் : வேட்டுவர்கள்
– க. மல்லிஸ்வரன்
46. மாந்தரஞ்சேரல்: மெய்க்கீர்த்தி – மகேஸ்வரி சுப்ரமணி, MCA
47. ஒடுவங்க நாட்டு வரலாறு – சரோஜினி சந்திரசேகரன்
48. ஒப்பீட்டு நோக்கில் கண்ணப்பரும் காரைக்காலம்மையாரும் – பாரதி. சா, பேரா. ச.இரவி
50. தியாகச் செம்மல் ஐயா ஆண்டமுத்துக் கவுண்டர்
– திருமதி. வேணுகா தேவி. மயிலேறு ரவீந்திரன்
51. பக்தி இலக்கியங்களில் வேட்டுவர் – திருமதி.தி. பவள சங்கரி
52. வரலாற்றில் வல்வில் ஓரி – முனைவர் மு.கலா
53 வரலாற்றில் வேட்டுவர்களின் நிர்வாகப் பணிகள்
– ப.செழியன்
54. வரலாற்று ஆதாரங்களில் வேட்டுவர் – முனைவர் ம.ஜெயலட்சுமி
55.வேட்டுவ அரசன் அல்லாள இளையான் பட்டயம்
ஓர் ஆய்வு – வடிவேலு ராமசாமி
56. வேட்டுவ மாமன்னன் அல்லாள இளைய நாயக்கர்
– பொறியாளர்; கோபிநாத்
57. வேட்டுவர் ஆளுமையும் கலைப் பண்பாடும்
– அனந்தபுரம் கோ.கிருஷ்ணாமூர்தி
58. வேட்டுவரின் குலங்களும் அரசர்கள் வரலாறும்
– முனைவர் வி.முருகன்
59. புதுக்கோட்டை மாவட்டச் சிற்றரசர்களில் வேட்டுவ நிசாத அரசர்கள் – புலவர் பு.சி.தமிழரசன்
60. பெருமைமிகு வேட்டுவர் – சில நினைவுகள்-பேராசிரியை சு.தமிழ்ப்பொன்னி M.Sc., B.Ed.,
61. கொங்குநாட்டு முருகன் மலைக்கோயில்களில் வேட்டுவர் முதல் உரிமை – ஆர். பழனிசாமி