Menu

Month November 2024

பறைமகன் வேடமணிந்த சிவபெருமான் – இறையும் பறையும் நூல்

இறையும் பறையும் என்ற இந்த நூலின் தலைப்பு சிலருக்கு முரணாகத் தோன்றும். ஏனெனில் இறை புனிதத்துவத்தை உணர்த்துவது. ‘பறை’ தற்கால நிலைப்படி அது தீண்டாமையை உணர்த்துவது என அடையாளமாக்கப்பட்டுவிட்டது. இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருப்பதாக உணரப்படுகின்றது. ஆனால் இரண்டுக்கும் (இறை-பறை) உள்ள இணைபிரியா தொடர்புகளை ஆன்மிகப் பெரியோர்களான ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் வழங்கப்பட்ட இலக்கியப் படைப்புகளைக் கொண்டு…

சமய வழிபாட்டிலும் வரலாற்றிலும் மரக்கால்

“பல்லவர் காலத்திற்கு முன்பு மரக்கால் எனும் அளவையியல் கருவி அம்பணம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இத்தகைய மரக்கால் பல்லவர் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் நமக்குக் குறிப்புகள் தருகின்றன. பல்லவர் காலத்திய சைவ, வைணவ சமயங்களின் புராண வரலாறும் மரக்காலைப் பற்றிக் குறிப்புகள் தருகின்றன. மரக்காணம் எனும் ஊரிலுள்ள பூமீஸ்வரர் திருக்கோயிலுள்ள சிவபெருமானின் பக்தன்…

சங்க காலத்தில் பிரமதேயங்களின் முன்வடிவம்

சங்க காலத்தில் பிரமதேயங்களின் முன்வடிவம் சங்க காலம் வீரயுகக் காலம். சீறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோருக்கிடையே தொறுப் பூசல்கள் அடிக்கடி நடக்கும். சங்க காலத்தில் நிகழ்ந்த தொறுப் பூசல் வேறு, போர்கள் வேறு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் (பூங்குன்றன், ர. 2016: 19-30). ஆநிரை கவர்தலும், ஆநிரை மீட்டலும் (தொறுப்…

பழங்கால காசு (நாணயம்)

காசு (நாணயம்) : இவற்றிலிருந்து சங்க காலத்தில் பண்டமாற்று வாணிகம் நடந்ததை அறிகிறோம். ஆனால், பண்டமாற்று வாணிகம் நடந்த அந்தக் காலத்தில் காசு வழங்கப்படவில்லை என்று கருதுவது கூடாது. அதே காலத்தில், செம்பு, வெள்ளி, பொன் காசுகளும் வழங்கி வந்தன. அந்தக் காசுகள் விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதற்குக் பயன்படுத்தப்பட்டன். பண்டமாற்று நடந்ததைச் சங்க நூல்களிலிருந்து தெரிந்து…

சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு

சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு : இவ்வாய்வின் வரையறைக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு பற்றியும் அதற்கு முன்னர் அவர்களுடைய நிலை பற்றியும் ரங்கசாமி நாயக்கர் (65) என்ற குடுகுடுப்பைக்காரர் கூறிய தகவல்கள் பின்வருமாறு “ரங்கசாமி நாயக்கருடைய முப்பாட்டன் குடியிருந்த ஊர் மதுரை மாவட்டம் அணைப்பட்டி அருகிலுள்ள எத்துரு மலைப்பட்டி அவர் ஏழு வயதுச் சிறுவனாக…

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள்

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள் : முதலாம் இராசராசன் தனது தலைநகரமான தஞ்சாவூரில் ஒரு பெரிய சிவன் கோயிலைக்கட்டி, அதில் தனது பட்டப்பெயரான இராஜராஜேஸ்வரர் என்ற பெயரிலேயே லிங்கத்தைப் பிரதிட்டை செய்தான் இக்கோயில் ஒருஅரசகோயில் என்றே அழைக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு கட்டப்பட்ட அரசர்களின் பள்ளிப்படைக் கோவில்களைவிட இக்கோவில் வேறுபட்டது. தனது அரசின் வலிமையைப் பறைசாற்றுவதற்காக இக்கோயிலை…

திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வள்ளலார் வரை

திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தின் நவீனத்துவமும், ‘உலக வியாபார வழக்கும்’ (3718), சைவ மடங்களின் கடாட்சமும், ஜமீன் மற்றும் சமஸ்தானங்களின் சன்மானங்களும், பிரிட்டிஷ் துரைத்தனத்தின் கெடுபிடிகளும், கவிராயர் வித்துவான் புலவர் பிரசங்கி ஆகியோரின் நச்சரிப்பும் தீண்டாத கிராமப்புறத்தில் இராமலிங்கர் தமது சன்மார்க்கப் பணிகளைச் செய்து வந்தார். அவ்வாறு ஒதுங்கி…

களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள்

களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள் 1.கூரம் செப்பேடு, “முதலாம் நரசிம்மவர்மன் சேர, சோழ பாண்டிய,களப்பிரருடன் போரிட்டான்.” என்று கூறகிறது. இங்கே களப்பிரர் என்போர் தமிழ்முத்தரையரும், வானவக்கோரையரசரும் தான் 2. இலங்கையை நோக்கி படைஎடுத்துப் போன சோழர்ப் படை களப்பிரர் படையே! கி.பி. 480இல் தமிழகத்தை ஆண்டவர் களப்பிரர்களே ஆவார். 3. “கோவிசைய நரைசிங்க பருமற்கு…

களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி

களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி விநயவிநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில் புத்த தத்தர் அந்த நூலை அவர் பூதமங்கலத்தில் தங்கியிருந்தபொழுது எழுதியதாகக் குறிப்பிடுகிறார். சுருக்கமாக, சோழப்பேரரசின் கடற்றுறை நகரானதும், காவிரி பாய்வதால் மண் வளம் பெற்றதும், அமைதி நிலவும் பூதமங்கலம் என்ற பெருநகரில் வெணுதாசன் என்பானுக்கு உரிய மாளிகையில் நான் வாழ்ந்திருந்த பொழுது…

கொடுங்கல்லூர் கோவில்

கேரளக் கோவில்களில் பிராமணர் அல்லாதார்களில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு உரிமையும் பங்கேற்பும் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது கொடுங்கல்லூர் கோவிலே. மலையாந்தட்டான் புலையர்,குடும்பர், குறுமார் (குறும்பர்), அரையர், வள்ளுவர் என சில சாதியினரின் உரிமை இன்றளவும் நிலை நாட்டப்படுகிறது. குறும்பா என்னும் குறுமான் சாதியுடன் கண்ணகியை இணைக்கும் வாய்மொழிச் செய்திகள் சில தொகுக்கப்பட்டுள்ளன. கேரள வயநாடு…