Description
தமிழ் மொழியின் அறிவியல் கூறையும், தமிழினத்தின் அறிவியல் மரபையும், திட்டமிட்டுத் தாழ்த்தி புறக்கணித்தது தமிழினத்தின் மீதான அயலார் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்பட்டது. “தமிழால் ஒன்றும் ஆகாது. தமிழினத்திற்கு ஒன்றும் தெரியாது” என்ற எண்ணம் கணிசமானத் தமிழர்களிடையே கூட எற்பு பெற்றது. இந்நிலையில், தமிழர் மரபு மருத்துவம், மரபு வேளாண்மை , மரபுக் கட்டடக்கலை, மரபு இசை – ஓவிய அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் தமிழர் மரபு அறிவை ஆதாரங்களோடு பறைசாற்றும் நூல்கள் பல அண்மைக் காலமாக வந்த வண்ணம் உள்ளன. அறிவியல் – தொழில் நுட்பத்தில் மட்டுமின்றி, பண்டையக் காலத்திலும் நவீன காலத்திலும் இந்த மண்ணின் மரபோடு இணைந்த பகுத்தறிவுக் கொள்கைகள் முனைப்பாக வெளிப்பட்டதை இந்நூலின் பல கட்டுரைகள் விளக்குகின்றன.