Description
தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தனர் என்பதற்குத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் சான்றுகளாகின்றன. ஐந்திணைகளுக்குரிய விலங்குகளைத் தொல்காப்பியம் கருப்பொருளில் விரித்துக் கூறுகின்றது. தமிழ் மொழியின் கருவூலப்பெட்டகமாய் விளங்கிய தொழில் வழக்குச் சொற்கள் மறைந்து அழியும் நிலையில் இருப்பதால் அத்தகைய சொற்களைச் சேகரித்து அவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய சூழல் தற்சமயம் உருவாகியுள்ளது. அவ்வகையில் கால்நடைகள் குறித்த சிறப்புச் சொற்கள் இலக்கியங்களிலிருந்தும் கள ஆய்வின் மூலமும் திரட்டப்பெற்று இவ்வகராதியில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘கால்நடை வளர்ப்புக் கலைச்சொல்லகராதி’ என்னும் இவ்வகராதியில் இடம்பெற்றுள்ள சொற்களனைத்தும் தமிழ் மொழியின் சொல்வளத்தையும் பொருள் ஆழத்தையும் எடுத்தியம்புகின்றன.




