Description
நகரவாசிகளான நளினிகளும் நாதர்களும் ஓர் நாள் கிராமம் சென்று கிராம மக்களுக்கு உபதேசம் செய்கிறார்களே அதைப் பகுத்தறிவாளர்கள் கிராம சேவை என்று கருதமாட்டார்கள். அது அந்த நாகரீகத் தோழர்களுக்கு மனமகிழ்ச்சிக்காகச் சிக்கனமான முறையிலே அவர்களாக வகுத்துக்கொண்ட நிலாச் சோறு! கிராம சேவை என்றால் கிராமம் நகரம் என்று பேதம் காட்டி அந்தப் பேத அமைப்பின் மூலமாக ஒய்யாரமாக வாழ ஒரு இடமும் ஓலமிட்டு வாழ மற்றோர் இடமும், ஒலமிடுபவரிடம் ஒய்யாரமாக வாழுவார் ஓய்வாக இருக்கும் ஓர் நாள் சென்று. துக்கம் விசாரிப்பதுமாக இருக்கிறதே. அது ஒழிய வேண்டும். கிராமசேவை என்று இன்றுள்ள திட்டம், வெறும் கபடம். கள்ளமறியாத உள்ளமுடையவரைக் கொள்ளையடித்து வாழும் வழி. இதனைச் சமதர்மிகளோ, பகுத்தறிவாளர்களோ, ஏற்கமாட்டார்கள். இது சுரண்டும் முறை என்று கூறுவர், அழும் குழந்தைக்குப் பாலிலே அபின் கலந்தூட்டும் முறை என்றுரைப்பர். உண்மையிலே, தேச பக்தர்கள் என்பவர்கள் இத்தகைய கிராம சீர்திருத்தம், சேவை என்று பேசுகிறார்கள் என்றால், அது சூதாக இருக்கவேண்டும் அல்லது ஏமாளித்தனமாக இருக்க வேண்டும்.
-புத்தகத்திலிருந்து


