9000 ஆண்டுகள் உலகின் பழமையான வேட்டைகாரப் பெண்கள் – புதிய ஆய்வு

உலகின் மூத்த பெரும் வேட்டையாடிகள் பெண்கள் – புதிய ஆய்வு கட்டுரை: இராஜசேகர் பாண்டுரங்கன் ஆதிகால மனித வாழ்வில் ஆண்கள் தான் அதிகம் வேட்டையாடுபவராகவும், பெண்கள் உணவு சேகரிப்பாளராகவும் இருந்தனர் என்ற கருத்து கடந்த சில நூற்றாண்டுகளாக நிலவியது. ஆனால் சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண் வேட்டையாளரின் புதைபொருள் எச்சங்கள் மூலம், பெண்கள்…

2300 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் முதல் காதல் கல்வெட்டு

இந்தியாவின் முதல் காதல் கல்வெட்டு, தேவதாசிக்கு எழுதிய 2300 ஆண்டுகள் பழமையானக் கல்வெட்டு. காதலர்கள் சந்திக்கும் இடங்களில் அவர்களின் பெயர்கள் எழுதி அம்புவிடுவதை நாம் பல இடங்களில் கண்டதுண்டு. இந்த காதல் சின்னம், இன்று நேற்று தோன்றியது அல்ல. இவ்வாறு காதலன் காதலி பெயரை எழுதிவைக்கும் தகவலை சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பே காணப்பட்டதை, நாம்…

ஊரின் எல்லைகளைக் குறிக்க பெண் யானை.

ஊரின் எல்லைகளைக் குறிக்க பெண் யானை. இன்று ஒவ்வொரு கிராமத்திலும், மணியக்காரர் என்ற ஒருவர் இருப்பதை அறியலாம்.. பெரும்பாலும் கிராம நிர்வாகம் மற்றும் நியாயத்தார் சபையில் அவர் இருப்பதை நாம் அறிய முடிகின்றது. இவரின் வேலை பொதுவாக கணக்கு மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட வரையறை எல்லையை உறுதிப்படுத்தும் பொறுப்பில் (Surveyor) இருப்பவர். நிலத்தை அளப்பதற்கு இவரையே…

நூலறி புலவர்கள் – கட்டடக்கலை

இன்று கட்டட வேலை துவங்கும் பொழுது பொறியாளர்கள் நூல் பிடித்து, நான்கு திசையிலும் இடத்தை அளந்து, கட்டட பாகங்களையும், தூண்களையும் குறிக்கும் வழக்கம் (Foundation Marking) போலவே, சங்க காலத்திலும் இருந்தது பற்றி, பத்துப்பாட்டான, நெடுநல்வாடை குறிப்பிடுகிறது. இன்றைய பொறியாளர்களைப் போலவே அன்றும் “நூலறி புலவர்கள் (படித்தவர்கள்)” எனப்படும் கட்டிடக்கலை பற்றிய நூல்களைப் படித்த வல்லுநர்கள்,…

ஜன்னல் தமிழ் பெயரா?

ஜன்னல் தமிழ் பெயரா? ஒரு வெளிநாட்டு சொல், தமிழில் நிலை பெறுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் தமிழா அல்லது வேற்று மொழி சொல்லா என்பது கூட தெரியாத அளவுக்கு எல்லோராலும் அறியப்படும் சொற்கள் தமிழில் வெகு சொற்பமானவை. பெரும்பாலும் வடமொழிச் சொற்கள் தமிழில் மிகுதியாக காணப்படும். அவற்றை தமிழில் இருந்து நாம் வேறுபடுத்தி காண்பது…

கண்ணவர் என்றால் என்ன?

வரலாற்று அடிப்படையில் நேரடி காலச்சன்றுகள் பல அளிக்கத் தவறினாலும் அக்காலத்தின் பொது நிலையை காண உதவும் கண்ணாகத் தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன.   கண், எனும்போது ஒரு செய்தி நினைவுக்கு வருகின்றது, தொகைப்பாடல்கள் (சங்க இலக்கியம்) முழுவதும் அரசர்கள் பற்றியும், மக்களைப்பற்றியும் கூற விழையும் போது நல்லாட்சி தரும் காரியத்தில் அரசனுக்கு உறுதுணையாக இருந்து கடமையாற்றும்…

பாண்டியருக்கு முன்பு மதுரையை ஆண்ட மன்னர் யார்?

இறந்த மன்னரை புதைப்பற்கு முன் படையெடுத்து சென்ற மக்கள். ஏன்? இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் மதுரையானது பல நூற்றாண்டுகள் தொடர்ந்து மக்கள் வாழும் ஒரு முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இன்றும் மதுரையில் எங்கு தோண்டினாலும் தொல்லியல் எச்சங்கள் நமக்கு கிடைத்த வண்ணமே உள்ளன. மதுரை என்றாலே பாண்டியர்கள் தான் நம் ஞாபகத்துக்கு வருவார்கள். ஆனால் கூடல்…

சேரன் பயன்படுத்திய போர் இயந்திரப் பறவை

ஆதி மனிதன் பறவையைப் போல தானும் பறக்கமுடியும் என்ற எண்ணத் துவங்கி, படிப்படியான முயற்சியால், ஏதோ ஒரு விசைப் பொறியின் உதவியால் தான் மனிதனால் பறக்க இயலும் என்ற அறிவியல் பார்வை உருவாகியிருந்ததை எழுத்து ஆவணங்கள் படி சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காணமுடிகிறது. பாபிலோனியர்களின், Epic of Etana என்ற இதிகாசத்தில் பருந்தினை…

நாயக்கர் என்ற சொல் எங்கிருந்து வந்தது ?

நாயக்கர் என்ற சொல் “நியோகி” என்ற சாளுக்கிய நாட்டு நிர்வாக சொல்லில் இருந்து பெறப்பட்டது என்பர். இது சாளுக்கிய அரச நிர்வாகத்தில் இருந்த பிரமணர்களை குறிப்பிட்டது. நியோகி (நி+யோகி) என்ற சொல்லுக்கு யோகங்களை அதாவது வழிபாட்டு சடங்குகள் பூசை செய்தல் போன்றவற்றை கைவிட்டு, அரச நிர்வாக, மற்றும் வேறு பணிகளுக்கு சென்றவர்கள் என்று பொருள். தென்னிந்தியாவில்…

இராவணனே அஞ்சியதாக கூறப்படும் பாண்டிய மன்னன்

பாண்டியர் என்ற சொல் பழமையானவர் எனக் குறிக்கும் “பண்டு” எனும் சொல்லிலிருந்து பிறந்தது என்பர். தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களுள் தமிழை, சங்கம் அமைத்துப் போற்றிய பெருமை பாண்டியரையேச் சாரும். பாண்டியர்கள் சைவ நெறியைப் பின்பற்றியதோடு, வைணவ, வேள்விகளை வளர்க்கும் வைதீகத்தையும், சமண நெறிகளையும் போற்றியுள்ளனர் என்பது இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், கோவில்கள் மூலம் நாம் அறியலாம்.…