Description
இந்து சமயம் என்ற சனாதன தர்ம சமயம் என்று தோன்றியதென யாராலும் அறுதியிட்டு உரைக்க இயலாது. இந்து சமயம் இருபெரும் பிரிவுகளை உடையது. ஒன்று சைவம் மற்றது வைணவம். இரண்டும் இரு வேறுபட்ட பெயர்களைக் கொண்டிருந்தாலும் ஒரே மரத்து வேர்களைப் போன்றதே. நதிகள் பலவாயினும் கலக்கும் கடல் ஒன்றே. அதுபோலச் சமயங்கள் இங்குப் பல என்றாலும் அவை சங்கமிக்கும் இடம் ஒன்றே என்ற உயரிய கருத்தை கற்போரால் உணர முடியும். ‘சைவமும் வைணவமும்’ என்ற இந்நூல் அனைத்துச் செய்திகளையும் நுணுகி விளக்கியிருப்பதோடு, படிப்போருக்கு எந்த வகையிலும் ஐயப்பாடு எழாவண்ணம் அமைந்துள்ளது.