Description
வரலாற்றைப் பொருத்தவரை அரச பரம்பரைகளையும் போர்களையும் பிற மரபினரோடான தொடர்புகளையும் அறிந்து கொள்ள கல்வெட்டுகளைக் காட்டிலும் செப்பேடுகளே பேருதவி புரிகின்றன. நம் நாடு முழுவதும் ஐயாயிரம் செப்பேடுகள் கண்டெடுக்கப்பெற்றிருக்கின்றன. இவற்றுள் சோழ, பல்லவ, பாண்டிய செப்பேடுகள் கிட்டத்தட்ட எழுபது என்கிற எண்ணிக்கையில இருக்கின்றன.இப்போது வெளியிடப்பெறும் செப்பேடு பாண்டியர்களுக்கும் விஜயநகர அரசர்களுக்குமான உறவை புரிந்துக்கொள்ளக் கூடியதாகவும் பாண்டியர்தம் நிலையைத் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.




