Menu

கடலூர் நகர அமைப்பு: ஒரு பார்வை

கடலூர் நகர அமைப்பு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கடலூர், கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், செயின்ட்டேஸ்ட் கோட்டை ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருந்தது 1866-இல் கடலூர் நகராட்சி ஏற்படுத்தப்பட்டபோது, மேற்குறிப்பிட்ட நான்கு பகுதிகளுடன் வண்டிப்பாளையம் (கரையேறவிட்டகுப்பம். செல்லங்குப்பம், புதுப்பாளையம், சொர்கால்பட்டு, மஞ்சக்குப்பம், வில்வராயநத்தம், உதரமாணிக்கம், குண்டு உப்பளவாடி, கோண்டுர். வண்ணாரப்பாளையம் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டன. இவற்றுள் சொர்கால்பட்டு, புதுப்பாளையம், வில்வராயநத்தம், மஞ்சக்குப்பம், கோண்டூர் ஆகிய ஊர்கள் கெடில நதியின் வடகரையிலும், செல்லங்குப்பம் தென்கரையிலும் அமைந்துள்ளன. வண்டிப்பாளையம், திருப்பாதிரிப்புலியூருக்குத் தென்மேற்கே, சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெண்ணையாற்றின் தென்கரையில், பெண்ணையாற்றுப் பாலம் அருகே இருந்த கிராமம் உதரமாணிக்கம் என்றழைக்கப்பட்டது.” குண்டு உப்பளவாடி, பாலத்தைக்கடந்து கிழக்கு நோக்கி ஓடும் பெண்ணையாற்றின் தென்புறம் அமைந்துள்ளது.

கடலூர் முதுநகர், புருகிஸ்பேட்டை, காலோபறச்சேரி. கிச்சின்பேட்டை, கொடிகால்குப்பம், குமரப்பசெட்டி, அக்ரஹாரம், மாலுமியார்பேட்டை, மஞ்சினிப்பாளையம், சாணாரப்பாளையம், கோரி. சிங்காரத்தோப்பு சோனகன்குப்பம், சுத்துக்குளம் மற்றும் வசந்ராபாளையம் உள்ளிட்ட பதினான்கு கிராமங்களின் தொகுப்பாகும். இவற்றுள், கோரி, சிங்காரத்தோப்பு, சோனகன்குப்பம் ஆகியவை தீவுக்கிராமங்கள் ஆகும்.

திருப்பாதிரிப்புலியூர் :

கெடில நதியின் தென் கரையில் அமைந்துள்ள திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகரிலிருந்து வடக்கு-வடமேற்குத் திசையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதி கடலூரின் முக்கிய வணிக மையமாகத் நிகழ்கிறது. முற்காலத்தில் இவ்வூர், பாதிரிப்புலியூர், பாடலபுரம், கன்னிகாபுரம், கன்னிமாவனம், கன்னிகாப்பு மற்றும் ஆதிமாநகர் எனும் பெயர்களால் அறியப்பட்டு வந்தது.” பாதிரி மரங்கள் நிறைந்த ஊர் என்பதால் பாதிரிப்புலியூர் எனவும், பின்னர் திரு என்னும் அடை மொழியுடன் திருப்பாதிரிப்புலியூர் என்றும் அழைக்கப்பட்டது. இவ்வூர் பேச்சு வழக்கில் திருப்பாப்புலியூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது

இத்தலத்துக்குரிய புனிதமரம் ‘பாடலம்’ என்பதால் பாடலபுரம் என்றும், அம்பிகை கன்னிகையாகி இறைவனைப்பூசித்து தவம் புரிந்து வந்ததால் கன்னிகாபுரம், கன்னிமாவனம் முதலான பெயர்களைப் பெற்றது. அம்பிகை இவ்வூரைக் காத்து நிற்பதால் ‘கன்னி காப்பு’ எனப்பட்டது.’ ஆதிராசன் எனும் செங்கோல் மன்னன் திருக்கோயிலில் பணிபுரிந்தும், விழா எடுப்பித்தும், நகர் அமைத்தும் சிறப்பித்ததால் ‘ஆதிமாநகர்’ என அழைக்கப்பட்டது. பாடலீசுவரர் கோயில் அமைந்துள்ள இவ்வூர் சமணமுனிவர்களால் பாடலபுத்திரம்’ என்றழைக்கப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் பெரும்புகழ் பெற்றிருந்த ‘பாடலிபுத்திரம்’ எனும் சமணர்களின் தலைமையகம் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்திருந்தது. திருநாவுக்கரசர் ‘தருமசேனர்’ என்னும் தலைமைப் பட்டத்துடன் சமணர்களின் தலைவராகத்திகழ்ந்ததும் இங்குதான் பாடல் பெற்ற சிவன் கோயிலும் ஞானியார் மடமும் இங்கேதான் உள்ளன.

இவ்வாறு நான்கு பிரிவுகளாக இருந்த கடலூர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கடலூர் முதுநகர் கடலூர்ப் புதுநகர் என்று இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. கடலூர் நகராட்சியின் தென்பகுதி கடலூர் முதுநகர் என்றும். வடக்கேயுள்ள திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், செயின்டேவிட் கோட்டை, வில்வராயநத்தம். செம்மண்டலம். கோண்டூர் மற்றும் உதரமாணிக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி கடலூர்ப் புதுநகர் என்றும் அழைக்கப்பட்டன. கடலூர் முதுநகர் மற்றும் கடலூர்ப் புதுநகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இன்றைய கடலூர், வடக்கில் பெண்ணையாற்றாலும், தெற்கில் கடலூர் முதுநகராலும், கிழக்கில் வங்கக்கடலாலும், மேற்கு மற்றும் தென்மேற்கில் முறையே திருப்பாப்புலியூர், கேப்பர் மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடலூர் வட்டத்தின் பரப்பளவு 448 சதுர மைல்களாகவும்.” கடலூர் நகராட்சியின் பரப்பளவு 13.33 சதுர மைல்களாகவும் இருந்தது.” 1947-ஆம் ஆண்டுவரை கடலூர் நகராட்சியின் பரப்பளவில் மாற்றம் ஏதும் இல்லை.

சோழமண்டலக் கடற்கரையில் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் 1681-1947 கடலூர் நகரமயமாதல் ஓர் ஆய்வு
₹390
Buy Link: https://heritager.in/product/sozha-mandala-kadarkaraiyil-aangileyar-kadal-vaanibam/