Menu

பெரியாண்டவன் கோயிலின் அமைவிடங்கள்

பெரியாண்டவன் கோயிலின் அமைவிடம்

புதுவையில் மிகப் பழமையான நகராட்சியினைக் கொண்ட பகுதியாகவும், புதுவையின் நெற்களஞ்சியமாகவும் விளங்குவது ‘பாகூர்’ எனும் ஊராகும். இங்குள்ள ஏரியின் கரையோரத்தில் உள்ள ‘கரமேடு’ எனும் குடியிருப்புப் பகுதியில்தான் இப்பெரியாண்டவன் கோயில் உள்ளது. அரசு அடிப்படையில் பார்க்கும்போது, இப்பகுதி கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழ்நாட்டுப் பகுதியாகும். ஆனால், அந்த ஏரியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் புதுச்சேரிப் பகுதியாகும். சுரமேடு என்னும் ஊர் புதுவைப் பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் இடைவெளியில் வேறுபட்டு நிற்கிறது. இருப்பினும் சுற்றிலும் உள்ள குலதெய்வமாதலால் புதுவை மக்களின் புதுச்சேரி சிறுதெய்வ வழிபாட்டிற்குரியதாக இக்கோயில் இக்கட்டுரையில் பேசப்படுகிறது.

பெரியாண்டவன் கோயில் அமைப்பும் தெய்வத்தின் உருவமும் சிறுதெய்வங்களுக்குக் கோயில் கட்டுவதும் அதிலும் திட்டமிடப்பட்டுக் கட்டுவதும் இல்லை. கோபுர அமைப்பு முதலானவை முற்றிலும் மறுக்கப்படும் என்பது பெருந்தெய்வத்திலிருந்து சிறுதெய்வங்களை வேறுபடுத்திப் பார்க்குமிடங்களில் தென்படுகிறது. அவ்வகையில் இக்கோயிலும் அமைந்துள்ளது. இக்கோயில் ஏறக்குறைய எட்டுக்குப் பத்து அளவில் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டுள்ளது. இதனது மேல்தளம் கிடைமட்டமாகவே அமைக்கப்பட்டுள்ளது; கோபுர அமைப்பு எதுவுமில்லை.

இக்குலதெய்வம் விருதாசலத்தில் உள்ள ‘ஊத்தங்கரை’ எனும் பகுதியில் இருந்ததாகவும், இத்தெய்வத்தை வணங்கிய பங்காளிகள், எங்களால் இவ்வளவு தூரம் வரமுடியவில்லை. என்று கூறியதாகவும், ஆதலால் அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு நான்கு பானைகளைக் கொடுத்ததாகவும், பின்னர் அவர்கள் அதைத் தலைமீது தூக்கியவாரே இங்குக் கொணர்ந்து ஏரிக் கரையில் ஒலைக் குடிசை கட்டி, அதில் வைத்து வழிபட்டதாகவும். பின்னொருனாள் அக்குடிசை தீயில் கருகிவிட்டதால், இவர்கள் இவ்விடத்தில் சுண்ணாம்புக் காரையால் கோயில் கட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, இக்கோயிலினுள் இருக்கும் பெரியாண்டவனின் உருவம் என்பது பானைகளையே குறிக்கிறதென்பதை உணரமுடிகிறது.

அதாவது, எதிரெதிரே இரண்டு பானைகளைக் கவிழ்த்து வைத்து வணங்குகின்றனர். இங்குப் பெரிய பானைகள் ஒரு ஜோடியும், சிறிய பானைகள் ஒரு ஜோடியும் ஒன்றோடொன்று எதிரெதிரே கவிழ்த்து வைத்து, அதில் பூசையிட்டு அதனைத் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவற்றில் பெரிய பானைகளால் ஆனது பெரியாண்டவன் என்றும், சிறிய பானைகளால் ஆனது அவரது தங்கை ‘ஈசாத்தி’என்றும் கூறுகின்றனர். இவ்விரண்டு தெய்வங்களும் அக்கோயிலினுள் ஒரு திண்ணையமைத்து அத்திண்ணையின் மீது வைக்கப்பட்டிருப்பதைத் தவிர, வேறெந்த அலங்காரமும் இதற்குச் செய்யப்படவில்லை. அதனைப் பின்வரும் படத்தில் நன்கு காணமுடிகிறது.

நம்ம குலசாமிகள் – பேரா. சு.சண்முகசுந்தரம் பேரா. சுதாகர் சிவசுப்பிரமணியம்
₹850
Buy Link: https://heritager.in/product/namma-kulasaamikal/

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?

1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்