Description
இந்த நாட்டின் தொல்குடி மக்களான ஆதிதிராவிடர்கள் நீண்ட நெடிய அரசியல் வரலாறு கொண்டவர்களாவார்கள். இந்தச் சமூகத்தில் தோன்றி பொது நன்மைக்காகப் பாடுபட்ட தலைவர்கள் ஏராளம். அவர்களது உழைப்பால்தான் இந்த மக்கள் இவ்வளவு தூரம் உரிமைகளைப் பெற்றவர்களாய் உயர்ந்திருக்கிறார்கள்.
ஆதிதிராவிடச் சமூகத்தில் தோன்றிய அரசியல் முன்னோடிகளைப் பற்றிச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது இந்நூல். மற்றவர்களால் மூடிமறைக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் முக்கியமான நூல்களை வெளியிட்டு அம்மக்களின் அரசியல் வரலாற்று இழை அறுந்துவிடாமல் காத்த சிந்தனையாளர் அன்பு. பொன்னோவியம் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலை அவரது மகன் ஆதிமன்னன் இப்போது செம்மைப்படுத்தித் தந்துள்ளார்.