Description
ஜெ. பாலசுப்பிரமணியம் (பி. 1978) திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தில் பிறந்தவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவத்தில்(MIDS) ஆராய்ச்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றவர். மதுரை காமராசர் பகலைக்கழகத்தில் இதழியல் துறையில் பணியாற்றும் இவர் தலித் வரலாறு, அரசியல் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார்.
இவரது நூல்கள் ‘சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை தலித் இதழ்கள் (1869 -1943)’, ‘பூலோகவியாசன் தலித் இதழ் தொகுப்பு’ மூலம் தலித் இதழியல் வரலாற்றை மீட்டுருவாக்கியுள்ளார்.