போரும் போர் முறைகளும்
(1) மறப்பண்பு
சங்க நூல்கள் தமிழரின் போரையும் போர் முறையையும் பற்றி விரிவாகக் கூறுகின்றன. அக்காலத்து வாழ்ந்த தமிழர் இயற்கையாகவே மறப்பண்பு படைத்தவராக விளங்கினர். அவருடைய பழக்கவழக்கம், தொழில், விளை யாட்டு யாவும் போர்ப் பண்புடன் திகழ்ந்தன. தமது பிள்ளைகளின் மார்பில் ஐம்படைத் தாலி அணிந்து இன்புற்றனர். சங்கு, சக்கரம், தண்டாயுதம் வாள். வில் ஆகிய ஐந்து கருவிகளின் உருவங்கள் அமைந்த இத்தாலியைப் பிறந்த ஐந்தாம் நாளில் பிள்ளைகளுக்கு அணிந்தனர். இத் தாலியை அணிந்த சிறு பிள்ளைகளைப் பற்றி அகநானூறும் புறநானூறும் எடுத்துக் கூறுகின்றன. புலியின் பல்லைக் கோத்துச் செய்த தாலிகளையும் இவர்கள் அணிந்தனர்.? விளையாட்டுக் காலங்களில் சேவற்கோழி, ஆட்டுக்கடா.
ஏறு முதலியவற்றைத் தம்முள் ஒன்றோடொன்று மோதிப் போர் செய்யும்படி பயிற்றிப் போர் செய்ய விட்டு அதனைப் பார்த்து மகிழ்வர். வளவிய இதழை உடைய குளவியும் குறிஞ்சியும் வாடும்படி ஏறுகள் தம்மிற் பொருதுகின்ற ஆர வாரத்தை மலைபடுகடாம் குறிக்கின்றது.’ ஏறுகள் பொருதுவதனாற் சேறாகும் இடத்தைப் பற்றி பட்டினப்பாலை பாடுகின்றது. போரென்று கேட்டால் அதனை விரும்பி ஆரவாரிக்கும் சிவந்த கண்ணை உடைய வீரர் தமிழர்.’ ஊரிலுள்ள மன்றின்கண் தூங்கும் முழவினது காத் றெறிந்த தெளிந்த ஓசையையுடைய கண்ணின் ஒலியைக் கேட்பின் அது போர்ப்பறையென மகிழ்வர்.
போரென்று கேட்பின் விரும்பும் மறவரை அரசன் பறவைகள் மூலம் போருக்குக் கூடாத நிமித்தம் கண்டால் பகையிடத்து ஏவான். அதனால் மனம் உடைந்து தம்முடைய பூரித்த தோள்களைத் தட்டி ஒருவரோடொருவர் பொருது மடிய வேண்டுமென்னும் மறப்பண்பு கொண்டு நிற்பர். இவர்கள் போரினைத் தமது பொழுது போக்காகக் கொண்டனர் எனலாம். இதனாலேயே சோழன் நலங்கிள்ளி வெல்லும் போரினைச் செய்யும் பாசறையின் கண்ணே இருத்தலல்லாது தன் நகரின்கண் இருத்தலை விரும் பான் எனப் புலவர் பாடினர்.” அடுகின்ற போரை விரும்புதலால் அரசர் இரவிற் கண்ணுறக்கமும் பெறாரென முல்லைப் பாட்டுப் பாடுகின்றது.
இத்தகைய மறப்பண்பு படைத்த தமிழரின் பெண்பாலாரும் வீரம் செறிந்த குணத்துடன் விளங்கினர். தம் வயிற்றிற் பிறந்து தம் முலைப்பாலுண்ட மக்கள் மறம் குன்றாத மானமும் வீரம் செறிந்த வீறாப்பும் உடையராதல் வேண்டு மென்பது தமிழ்த் தாய்மாரின் குறிக்கோள். புறங்காட்டி ஓடாத மேற்கோளை உடைய வீரனின் தாய், தன் மகனின் மாண்பைக் கண்டபொழுது அவளுடைய வாடிய முலைகள் பால் ஊறிச் சுரந்தன எனப் புறநானூறு கூறுகின்றது.” “போரின்கண் என் மகன் புறமுதுகிட்டு ஓடியிருப்பின் அவனுக்குப் பாலூட்டிய இம் முலையை அறுத்திடுவேன்” என்று வஞ்சி னம் கூறிப் போர்க்களம் புகுந்து, தன் மகன் இறந்து கிடப்பதுகண்டு.
ஈன்ற பொழுதிலும் பெருமகிழ்ச்சி கொண்டாள் தமிழ் மகள் ஒருத்தி நின் மகள் யாண்டுளன் என்று வினவியவர்க்குப் “புலி கிடந்து போகிய கல்முழைபோல அவனைப் பெற்ற வயிறே இது, அவன் போர்முனையிடத்துத் தோன்றுவான்; அவனைக் காணவேண்டின் ஆண்டுச் சென்றே காண்” என்று விடையிறுத்தாள் இன்னொருத்தி 5 பிள்ளையைப் பெற்று வளர்த்தல் தாயின் கடனென்றும், தன் குலத்துக்குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி அதற்குரிய அறிவு முதலியவற்றால் நிறைந்தவனாகச் செய்தல் தகப்பன் கடன் என்றும், படைக் கலத்தைத் திருத்தமாகச் செய்து கொடுத்தல் கொல்லன் கடன் என்றும், போர்க் களத்தில் மதயானைகளை வெட்டி வெற்றியுடன் மீளுவது அவ்வீரன் கடன் என்றும் கொண்டனர் அக்காலத்துத் தாய்மார்.
முதல் நாள் நடந்த போரில் தமையனையும், மறுநாட் போரில் கணவனையும் இழந்தும் உள்ளம் சோராத தாய், தன்குடியைக் காப்பதற்கு. ஒரு மகனையே பெற்றிருந்தாள். எனினும் அம்மகனைப் போருக்கு அனுப்ப அவள் தயங்கவில்லை. தன் மகனை அன்போடு அழைத்து வெள்ளிய ஆடையை உடுத்தாள் தலையில் எண்ணெய் தேய்த்துச் சீவி முடித்தாள். வேலை அவன் கையிலே கொடுத்தாள். ”நீயும் போய் வா போருக்கு” என்று கூறி வழி அனுப்பி வைத்தாள் அவள் “.
தமிழர் சால்பு – பேராசிரியர். சு. வித்யானந்தன்
300/-
Buy Link: https://heritager.in/product/tamilar-saalbu/
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?
1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்
(1) மறப்பண்பு
சங்க நூல்கள் தமிழரின் போரையும் போர் முறையையும் பற்றி விரிவாகக் கூறுகின்றன. அக்காலத்து வாழ்ந்த தமிழர் இயற்கையாகவே மறப்பண்பு படைத்தவராக விளங்கினர். அவருடைய பழக்கவழக்கம், தொழில், விளை யாட்டு யாவும் போர்ப் பண்புடன் திகழ்ந்தன. தமது பிள்ளைகளின் மார்பில் ஐம்படைத் தாலி அணிந்து இன்புற்றனர். சங்கு, சக்கரம், தண்டாயுதம் வாள். வில் ஆகிய ஐந்து கருவிகளின் உருவங்கள் அமைந்த இத்தாலியைப் பிறந்த ஐந்தாம் நாளில் பிள்ளைகளுக்கு அணிந்தனர். இத் தாலியை அணிந்த சிறு பிள்ளைகளைப் பற்றி அகநானூறும் புறநானூறும் எடுத்துக் கூறுகின்றன. புலியின் பல்லைக் கோத்துச் செய்த தாலிகளையும் இவர்கள் அணிந்தனர்.? விளையாட்டுக் காலங்களில் சேவற்கோழி, ஆட்டுக்கடா.
ஏறு முதலியவற்றைத் தம்முள் ஒன்றோடொன்று மோதிப் போர் செய்யும்படி பயிற்றிப் போர் செய்ய விட்டு அதனைப் பார்த்து மகிழ்வர். வளவிய இதழை உடைய குளவியும் குறிஞ்சியும் வாடும்படி ஏறுகள் தம்மிற் பொருதுகின்ற ஆர வாரத்தை மலைபடுகடாம் குறிக்கின்றது.’ ஏறுகள் பொருதுவதனாற் சேறாகும் இடத்தைப் பற்றி பட்டினப்பாலை பாடுகின்றது. போரென்று கேட்டால் அதனை விரும்பி ஆரவாரிக்கும் சிவந்த கண்ணை உடைய வீரர் தமிழர்.’ ஊரிலுள்ள மன்றின்கண் தூங்கும் முழவினது காத் றெறிந்த தெளிந்த ஓசையையுடைய கண்ணின் ஒலியைக் கேட்பின் அது போர்ப்பறையென மகிழ்வர்.
போரென்று கேட்பின் விரும்பும் மறவரை அரசன் பறவைகள் மூலம் போருக்குக் கூடாத நிமித்தம் கண்டால் பகையிடத்து ஏவான். அதனால் மனம் உடைந்து தம்முடைய பூரித்த தோள்களைத் தட்டி ஒருவரோடொருவர் பொருது மடிய வேண்டுமென்னும் மறப்பண்பு கொண்டு நிற்பர். இவர்கள் போரினைத் தமது பொழுது போக்காகக் கொண்டனர் எனலாம். இதனாலேயே சோழன் நலங்கிள்ளி வெல்லும் போரினைச் செய்யும் பாசறையின் கண்ணே இருத்தலல்லாது தன் நகரின்கண் இருத்தலை விரும் பான் எனப் புலவர் பாடினர்.” அடுகின்ற போரை விரும்புதலால் அரசர் இரவிற் கண்ணுறக்கமும் பெறாரென முல்லைப் பாட்டுப் பாடுகின்றது.
இத்தகைய மறப்பண்பு படைத்த தமிழரின் பெண்பாலாரும் வீரம் செறிந்த குணத்துடன் விளங்கினர். தம் வயிற்றிற் பிறந்து தம் முலைப்பாலுண்ட மக்கள் மறம் குன்றாத மானமும் வீரம் செறிந்த வீறாப்பும் உடையராதல் வேண்டு மென்பது தமிழ்த் தாய்மாரின் குறிக்கோள். புறங்காட்டி ஓடாத மேற்கோளை உடைய வீரனின் தாய், தன் மகனின் மாண்பைக் கண்டபொழுது அவளுடைய வாடிய முலைகள் பால் ஊறிச் சுரந்தன எனப் புறநானூறு கூறுகின்றது.” “போரின்கண் என் மகன் புறமுதுகிட்டு ஓடியிருப்பின் அவனுக்குப் பாலூட்டிய இம் முலையை அறுத்திடுவேன்” என்று வஞ்சி னம் கூறிப் போர்க்களம் புகுந்து, தன் மகன் இறந்து கிடப்பதுகண்டு.
ஈன்ற பொழுதிலும் பெருமகிழ்ச்சி கொண்டாள் தமிழ் மகள் ஒருத்தி நின் மகள் யாண்டுளன் என்று வினவியவர்க்குப் “புலி கிடந்து போகிய கல்முழைபோல அவனைப் பெற்ற வயிறே இது, அவன் போர்முனையிடத்துத் தோன்றுவான்; அவனைக் காணவேண்டின் ஆண்டுச் சென்றே காண்” என்று விடையிறுத்தாள் இன்னொருத்தி 5 பிள்ளையைப் பெற்று வளர்த்தல் தாயின் கடனென்றும், தன் குலத்துக்குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி அதற்குரிய அறிவு முதலியவற்றால் நிறைந்தவனாகச் செய்தல் தகப்பன் கடன் என்றும், படைக் கலத்தைத் திருத்தமாகச் செய்து கொடுத்தல் கொல்லன் கடன் என்றும், போர்க் களத்தில் மதயானைகளை வெட்டி வெற்றியுடன் மீளுவது அவ்வீரன் கடன் என்றும் கொண்டனர் அக்காலத்துத் தாய்மார்.
முதல் நாள் நடந்த போரில் தமையனையும், மறுநாட் போரில் கணவனையும் இழந்தும் உள்ளம் சோராத தாய், தன்குடியைக் காப்பதற்கு. ஒரு மகனையே பெற்றிருந்தாள். எனினும் அம்மகனைப் போருக்கு அனுப்ப அவள் தயங்கவில்லை. தன் மகனை அன்போடு அழைத்து வெள்ளிய ஆடையை உடுத்தாள் தலையில் எண்ணெய் தேய்த்துச் சீவி முடித்தாள். வேலை அவன் கையிலே கொடுத்தாள். ”நீயும் போய் வா போருக்கு” என்று கூறி வழி அனுப்பி வைத்தாள் அவள் “.
தமிழர் சால்பு – பேராசிரியர். சு. வித்யானந்தன்
300/-
Buy Link: https://heritager.in/product/tamilar-saalbu/