Category வரலாறு

தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடு புழங்கு பொருள்களும்

பழந்தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்கள் குறித்தும் தொழிற்குடியினர் குறித்தும் சங்க இலக்கியங்கள் முதலான செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தொன்மையும் தனித்தன்மையும் கொண்டுள்ள தமிழ்ச் சமூகத்தில் தொழிற் குடிகளின் சமூகப் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததென்பதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன. உழவுக் குடி, நெசவுக் குடி, தச்சர் குடி, கொல்லர் குடி, குயவர் குடி எனத் தொழில்முறையால் அடையாளப்படும்…

தியாகராய நகர், அன்றும் இன்றும்

தியாகராயர் பாண்டி பஜார் பகுதிக்கு தியாகராயா ரோடு என்று பெயர். அது பிட்டி தியாகராயச் செட்டியார் என்ற நீதிக்கட்சி தலைவர் நினைவாக வைக்கப் பட்டது. சிலர் எழுதுவது போல அவர் பி. டி தியாகராய செட்டியார் அல்ல, ‘பிட்டி என்பது தெலுங்குப் பெயர். தி. நகர் பற்றிய புத்தகத்தில் அவரைப் பற்றியும் பிற நீதிக் கட்சிப்…

கோவில்களும் பொருளாதாரமும்

கோவில்களும் பொருளாதாரமும் : பொருளாதாரத்தில் கோவில்களின் தாக்கம் பலவகைகளில்காணப்பட்டது. கோவில்களைக் கட்டுவதென்பதே ஒரு பெரிய பொதுநிறுவனமாக இருந்தது. பெரும்பாலான கோவில்கள், அரசராலும் அரச குடும்பத்தாலும் கட்டப்பட்டதால், அதிக அளவு அரசுப் பணம் அதில்செலவிடப்பட்டது. கோவில் கட்டும் பணி, திறமையான கொத்தர்கள்,சிற்பிகள், கைவினைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும். சாதாரணத் தொழிலாளர்களுக்கும் பெருமளவில் வேலை வாய்ப்பைப்பெற்றுத்தந்தது. கோவில்களுக்காகப் பஞ்சலோக விக்கிரகங்களைச்செய்து,…

இராமநாதபுரம் மாவட்டம்

அறிஞர் சோமலெ உலகம்-இந்தியா-தமிழ்நாடு என்றார் போல் முப்பெரும் பரிமாணங்களிலும் பயண நூல்களை எழுதி ‘தமிழ்ப் பயண இலக்கியத் தந்தை’ என்ற நிலைத்த புகழைப் பெற்றவர். பயண இலக்கியம். இதழியல், நாட்டுப்புறவியல், மொழி ஆய்வு, இனவியல் ஆய்வு. வாழ்க்கை வரலாறு குடமுழுக்கு மலர்கள். போன்ற துறைகளில், தமிழிலும், ஆங்கிலத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்…

வேளாண்மை உற்பத்தி : முதன்மைக் குலமும் துணைக் குலங்களும்

வேளாண்மை உற்பத்தி : முதன்மைக் குலமும் துணைக் குலங்களும் வேளாண்மை உற்பத்தியும் அதுசார்ந்த உழைப்புத் தேவையும்தான் பெருவாரியான மக்கள் திரளை மருத நிலத்தில் நிலையாகக் குடியிருக்கச் செய்திருக்கின்றன. பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகள், வாழ்நிலைகள், தொழில் பிரிவுகள், அரச உருவாக்கம் எனப் பல்வேறு சமூக உருவாக்கம் மருத நிலத்தில்தான் நடைபெற்றிருக்கின்றன. அதனால்தான், மருத நிலத்தில் மக்கள் குடியேறி…

இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள்

நாட்டின் பெயராக அமைந்த ஊர்கள் பல பிற்காலத்தில் பிரமதேயமாகவும், நகரமாகவும் தேவதானமாகவும் மாற்றம் பெற்றுள்ளது. நாடுகளுக்கு பெயரிடுவதில் வேறு வகையும் இருந்திருக்கின்றன. அவை கூற்றம், வளநாடு, ஆற்றுப்போக்கு, குளக்கீழ் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன. இவை இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற முறையில் இடம்பெற்ற பெயர்களாகும். ஆனால் நாடு, கூற்றம் போன்ற வழக்கமே அதிகளவில் இருந்திருக்கின்றன. குளகீழ், ஆற்றுப்போக்கு…

ஆலய நிர்மாணம்

ஆலய நிர்மாணம் நமது நாட்டில் சைவாகமங்களை ஒட்டியும், சாக்தேயம், பாஞ்சராத்திரிகம், தந்திரம் முதலியனவற்றை யொட்டியும் ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்படுகின்றன. சிவாகமங்கள் இருபத்தெட்டோடு சைவ உபாகமங்கள் நூற்றுப்பதின்மூன்று உள்ளன. சாக்தேய ஆகமங்கள் அறுபத்துநான்காகும். பாஞ்சராத்ராகமங்கள் நூற்றெட் டென்பர். அவற்றுள் முக்கியமானவை பாஞ்சராத்ரமும், வைகானஸமுமாகும். குமாரதந்திரம் முதலிய தந்திர நூல்களை மேற்கொண்டு எழுந்த கோவில்களும் பல உள. இவை…

நெய்தல் நிலத்தில் உமணர்

நெய்தல் நிலத்தில் உமணர் : உமணர் : உமணர் மீன்பிடித் தொழில் மட்டுமின்றி உப்பெடுக்கும் தொழிலையும் செய்தனர். இதை மதுரைக்காஞ்சி, நற்றிணை, அகநானூறு போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெரிய வண்டியில் உப்பை மட்டுமின்றித் தம் வீட்டுச் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு உள்நாடுகளில் நெடுந்தொலைவு சென்று விற்பவர்கள் உமணர்களாவர். உமணர் பெண்ணே வண்டியை ஒட்டிக்கொண்டு நடந்து செல்வாள். மாடுகள்…

இனவரைவியல் : வரலாறும் வரையறையும்

இனவரைவியல் : வரலாறும் வரையறையும் மானிடவியல் (Anthropology) என்பது மனித இனத்தின் உடல், மொழி, பண்பாடு, தொல்லியல் குறித்த பதிவுகளை ஆராய்வதாகும். சுருங்கக் கூறின் மனிதனைப் பற்றி ஆராயும் ஒரு முழுமையான அறிவியல் மானிடவியல் எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியிலேயே ‘மானிடவியல்’ என்னும் இந்த அறிவியலாராய்ச்சி (Epistemology) உலக தாடுகளில் தொடங்கப்பட்டுவிட்டது. இது பண்பாட்டு மானிடவியல்…

பழங்காலத் தொழில்பிரிவுகள்

பழங்காலத் தொழில்பிரிவுகள் ‘அந்தணர், அரசர், அளவர், இடையர், உப்பு வாணிகர் (உமணர்). உழவர், எயிற்றியர், கடம்பர், கடைச்சியர், கம்மியர், களமர், கிணைஞர். கிணைமகள். குயவர் குறத்தியர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர். கோசர், தச்சர்,துடியர், தேர்ப்பாகர், நுளையர், பரதவர். பறையர். பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொருநர், மடையர், மழவர்,…