Category வரலாறு

இலிங்காயத்துகளின் வாழ்வியல்

இலிங்காயத்துகளின் வாழ்வியல் : தனித்த பண்பாட்டுச் சடங்குகளோடு வாழ்க்கை நடத்தும் இலிங்காயத்துக்கள் உழைக்கும் உழைப்பாளிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளி உலகிற்குத் தெரியாமல் வாழும் இலிங்காயத்து இன மக்களிடம் இனப்பற்று, நிலவுடைமை, சொத்தின் அடிப்படையிலான இரத்த உறவுகள், திருமண குடும்ப உறவுச் சடங்குகள், உள்ளூர் சிறப்புப் பேசுதல் எனக் கட்டுக்கோப்பான நிலைகள் காணப்படுகின்றன. முந்தைய சமூக…

கலை வரலாற்றில் கணபதி

கலை வரலாற்றில் கணபதி : ‘ரிக் வேதத்தில் கணானாம்த்வகணபதிம்’ என்று சொல்லப்பட்டிருப்பினும் அது கணபதியைக் குறிக்கவில்லை. தைத்திரிய ஆரண்யகத்தில் ‘வளைந்த துதிக்கையை யுடைய தண்டின்’ என்ற கடவுள் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் கைகளில் தானியச் செடிகளும் கரும்பும் கதையும் வைத்திருப்பார் என்று வருகிறது. ஏறத்தாழ இதே காலத் தினைச் (C. 1000 B.C.) சேர்ந்த கலைச்சின்னம் ஒன்று…

பல்லவர் காலக் கல்வெட்டுகள்

பல்லவர் காலக் கல்வெட்டுகள் மண்டகப்பட்டு : பழங்காலத்தில் கோவில்களைப் பெரும்பாலும் மண், சுட்ட செங்கல், மரம் ஆகியவற்றில் அமைக்கும் வழக்கம் இருந்தது. இதை மாற்றி குடைவரைக் கோவில்களாகக் கட்டத்தொடங்கியது இடைக்காலத்தில் இருந்த பல்லவர்களும் பாண்டியர்களும் தான். அதிலும் மகேந்திரவர்ம பல்லவன் பல கோவில்களை இப்படிக் கட்டியிருக்கிறான். அவன் அமைத்த முதல் கோவிலான மண்டகப்பட்டு கோவிலில் இதை…

நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு

நாடுகள் வாரியாக ஊர்களின் பட்டியல் நிலப்படங்கள் ஆய்வு இந்நூலாய்விற்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் பட்டியல்கள், நிலப்படங்கள் இவ்வியலில் தரப்பட்டுள்ளன. முதலில் பாண்டிய நாட்டில் இருந்த நாடுகளின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளது. இவற்றோடு பாண்டிய நாட்டின் எல்லைப்புற நாடுகளும் உரிய நிலப்படங்களோடு இவ்வியலில் இணைக்கப்பட்டுள்ளது. பாண்டியநாடு இருபத்தொரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எண்ணிடப்பட்டு இருபத்தொரு நிலப்படங்கள் இவ்வியலில்…

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள்

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள் பாண்டியநாட்டில் அழகன்குளம், கீழடி, மாங்குடி, கொற்கை அகழாய்வுகளில் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் நூற்றுக்கு மேற்பட்டுக் கிடைத்துள்ளன. தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானையோடுகளில் பல வணிகர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் வடமொழிப் (பிராக்கிருதம் -சமஸ்கிருதம்) பெயர்களும் தமிழ் மொழிப் பெயர்களும் காணப்படுகின்றன. மேலும் இவற்றில் தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிப் பெயர்களும் உள்ளன. கீழடியில் நடைபெற்ற…

உத்தரநல்லூர் நங்கை

உத்தரநல்லூர் நங்கை: சமத்துவமும் உரிமையும் கோரி எதிர்ப்புக் குரல் கொடுத்த முதல் தமிழ்ப்பெண்மணி, புரட்சி மங்கை, 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உத்தரநல்லூர் நங்கை என்ற தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவரே என்று தமிழிலக்கிய வரலாறு காட்டுகிறது. இவர் பாய்ச்சலூர்க் கிராம மக்கள் காட்டிய சாதி வேற்றுமைக்குக் கண்டனக்குரல் எழுப்பி பாய்ச்சலூர் பதிகம் என்ற பாடல்களை இயற்றியுள்ளார்.…

இந்திய நாட்டுச் சமயப்பிரிவுகள்

இந்திய நாட்டுச் சமயப்பிரிவுகள் இந்தியா என்ற நாடு புதிதாகவே ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் ஒரே நாடாக 1858-ல் இணைக்கப்பட்டது. பல மொழிகள், பல இனத்தவர் வாழும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்த நாடாக இந்தியா உருவானது. மாநிலங்கள் பலவற்றிலும் பல்வேறு சமயங்களும் இருந்தன. ஆயினும், இந்திய மரபு என்ற சொல்லத்தக்க உரிமை பெற்ற மதங்களாக சைவம், வைணவம், ஜைனம்,…

ஆசீவகர்கள் – பெயர்க் காரணம்

ஆசீவகர்கள் – பெயர்க் காரணம் ஆசீவகர்கள் எனத் தமிழ் நூல்களில் அழைக்கப்படும் இவர்கள் ‘ஆஜீவக‘ (Ajivika) என வடமொழியில் குறிப்பிடப்படுகின்றனர். ஆஜீவ (Ajiva) என்ற வடமொழிச் சொல், ஓர் வாழ்க்கை நெறிமுறை (mode of life), தொழில், இல்லறத்தோராயினும், துறவறத்தோராயினும் சேர்ந்து வாழும் ஒரு குழுவினர் என்ற பொருள்பட நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆசீவகர்கள் ஓர்…

நாட்டுப்புறத் தெய்வங்கள்

நாட்டுப்புறத் தெய்வங்கள்: நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு வழிபடுகின்ற கிராம தெய்வங்களே நாட்டுப்புற தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் அல்லது சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை நாட்டுப்புற மக்களின் காவல் தெய்வங்களாக நோய் நீக்கி நலம் மற்றும் வளம் தருபவையாகக் கருதி வணங்கப்படுகின்றன. வணங்கினால் நன்மையும் வணங்காவிட்டால் தீமையும் நேரிடும் என்ற நம்பிக்கையில் மக்களால்…

திண்டுக்கல் மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – பதிவும் ஆய்வும்

திண்டுக்கல் மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – பதிவும் ஆய்வும் இந்தியாவின் வடபகுதியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புத்த சமயத்திற்காகத் தொடங்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் பின்னர் தொடர்ந்து வந்த காலங்களில் பல்வேறு சமயநிலைகளுக்கு உட்பட்டு கி.பி ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தினை வந்தடைந்தது. தமிழகத்தில் பல்லவர்களே குடைவரைக் கலையினைத் தொடங்கி வைத்தனர் என்றும், பாண்டியர்களே இக்கலையினைத் தொடங்கி…