Description
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் முன்னாள் தலைவரும், ‘மாற்றுவெளி’ ஆய்விதழின் சிறப்பாசிரியருமான வீ.அரசு இலக்கியம், அரசியல், வரலாறு, பண்பாடு ஆகிய துறைகளுக்கு இடையே ஒரு மையப்புள்ளியாக இருப்பவர். அவர் ஆற்றிய ஆய்வுரைகள் பத்து குறுநூல்களாக வந்துள்ளன. தனது ‘கங்கு வரிசை’ குறுநூல்களின் வழியே அடர்த்தியான விஷயங்களைப் பேசுவதற்கான ஒரு புதிய வடிவத்தை உருவாக்கியவர் வீ.அரசு. இந்தக் குறுநூல்களும் அதை நிரூபித்திருக்கின்றன. இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அரிய செய்திகளை, தமிழ்ச் சமூக வரலாற்றின் பல்வேறு நிகழ்வுகளை இக்குறுநூல்கள் கொண்டுள்ளன.