பாலம்மாள் – கோ.ரகுபதி

160

Add to Wishlist
Add to Wishlist

Description

பெண் சிந்தனையைத் தமிழ்ப் பதிப்புலகம் பதிப்பிக்கவில்லை என்ற குறையை ‘மாற்றத்துக்கான மகளிர் நூல் வரிசை’ நீக்கும். இதன் தொடக்கப் புள்ளி சிந்தாமணி இதழ் அதிபர் வி. பாலம்மாள். தன்னந்தனிப் பெண்ணாக நின்று இதழாசிரியராக, இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை முழுவதும் அவர் ஏற்று பெண்களுக்கென வெளியிட்ட முதல் இதழ் சிந்தாமணி. அக்கால இதழ்களான தாய்நாடு’, ‘குடியரசு’, ‘ஜஸ்டிஸ்’, ‘இந்து சாதனம்’, ‘பொதுஜன மித்திரன்’, ‘தாரூல் இஸ்லாம்’, ‘தேசோபகாரி’ போன்றவை ‘சிந்தாமணி’யை வரவேற்றன. புராதனத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பெற்றிருந்த உன்னத நிலையை மீட்டெடுக்கப் பாலம்மாள் ‘சிந்தாமணி’ வழியாகப் போராடினார். தொழிலாளிகளின் உழைப்பின் விளைவுதான் முதலாளிகளின் வளர்ச்சி எனக் கூறிய பாலம்மாள் பெண், தேசம், தாழ்த்தப்பட்டோர் விடுதலையை நேசித்தார்; சாதி, வர்க்கம் கடந்த மணவுறவை ஆதரித்தார். அவருடைய நூல்களுக்கு டாக்டர் எஸ். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஹிந்து இதழாசிரியர் எஸ். கஸ்தூரிரங்க அய்யங்கார் போன்ற ஆளுமைகள் முன்னுரை எழுதினர். பெண் முன்னேற்றத்திற்காகப் பாலம்மாள் எழுதிய தலையங்கம், கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

Additional information

Weight0.25 kg