Description
புலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன் போன்றோர் தொடங்கி வைத்த பிரிட்டிஷ் எதிர்ப்பை, போராட்டமாக மாற்றியவர்கள் மருது பாண்டியர். தென் இந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி, மருது பாண்டியர் நடத்திய போராட்டமே, முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டமாகும். தூந்தாஜி வாக், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, விருப்பாச்சி கோபால் நாய்க்கர் உள்ளிட்டோர் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். முதல் இந்தியச் சுதந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, பதினெட்டாம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டீஷ் இந்தியா காலத் தமிழகம், பிரிட்டிஷாரின் இந்திய வாழ்க்கை எனப் பல்வேறு கதைக்களன்களை விரித்துச் செல்கிறது இந்நாவல்.




