Description
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் நூலாசிரியர் ‘நோக்கர்’ என்ற தளத்தில் பதிவிட்ட சொல்லாய்வு குறிப்புகளே நூலாகியுள்ளது.தமிழ், மலையாளம் என இருமொழிச் சொற்களில் இருக்கும் ஒற்றுமை, வேற்றுமைப்படுதலை சொற்பொருள் ஆராய்ச்சி, சொற்பிறப்பியல் ஆராய்ச்சி மொழி ஓப்பீடு, நாட்டார் வரலாற்றுச் செய்திகள் போன்றவற்றுடன் சுவைபட- நகைச்சுவை கலந்து எழுதியிருப்பது படிக்கச் சுவையைக் கூட்டுகிறது.மலையாளத்தில் 70 சதவீதம் வடமொழிச் சொற்களும், 30 சதவீதம் தமிழ்ச் சொற்களும் கலந்திருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தமிழ்ச்சொற்கள் ஒருபொருளையும் மலையாளத்தில் வேறுபொருள் வழங்கப்படுவதையும் விரிவாக எழுதியுள்ளார்.




























