Description
பள்ளி மாணவராக நாடகங்களில் நடித்தவர் நூலாசிரியர். பின்னர், கல்லூரி ஆசிரியராக நாடகங்களைப் படைத்ததையும் நூலின் முகப்பில் கூறியிருக்கிறார். தொல்காப்பிய காலம், சங்கக் காலங்களில் நாடகங்களின் முன்னெடுப்புகளை விவரித்துள்ள நூலாசிரியர் சிலப்பதிகார காலத்தில் இந்திர விழாவின் இறுதிநாளில் 11 வகை நாடகங்களை மாதவி நிகழ்த்தியதையும், அதன் கதைச் சுருக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
























