Menu

மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயில் திருமலைநாயக்கர் கடவுள் பக்தி மிகுந்தவராக இருந்தார். அதனால் மதுரைக் கோயில்களில் மட்டுமின்றி, வேறு கோயில்களிலும் திருப்பணிகள் செய்து வந்தார்.

மீனாட்சி அம்மன் சந்நிதி இடத்துக்குத் தெற்கு வடக்காக இருக்கும் மண்டபம் சங்கிலிமண்டபம் எனப்படும்.

இந்த மண்டபத்துக்கு முன்பு கரிய மாணிக்கப்பெருமாள் கோயில் இருந்தது.

இம்மண்டபத்தை ‘மாலிக்கபூர்’ என்பவன் படையெடுத்து வந்து கி.பி. 1311ஆம் ஆண்டில் இடித்து விட்டான்.

நீண்ட நாட்களாய் அந்த மண்டபம் சிதைந்திருந்தது. திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யத் தொடங்கினார்.

அதன்பின்னர் சிதைந்த மண்டபத்திலிருந்த பெரிய தூண்களைப் பெயர்த்து எடுத்துப்போய் மீனாட்சி அம்மன் சந்நிதியை அமைத்தார்.

வைணவக் கோயில்களில் காணக்கூடிய அனுமார் பஞ் சபாண்டவர் உருவங்கள் அத்தூண்களில் பொறிக்கப்பட்டன.

காலப்போக்கில் கரிய மாணிக்கப் பெருமாள் உருவச்சிலை மறைந்திடவே, கோயில் மண்டபம் இப்போது ‘கூட்டு வழிபாட்டு மண்டபமாகிவிட்டது.

இதற்கு வடக்கு அடி வீதியில் ‘புகழ்பெற்ற திருவள்ளுவர் கழகம் உள்ளது.

அதற்குப் பக்கத்திலிருப்பது மொட்டைக் கோபுரம் அதற்கு எதிரில் பெரிய வாயில் இருப்பதைக் காணலாம்.

மேற்குறித்த மண்டபத்திற்கு திருமலை நாயக்கர் திருப்பணிகளை செய்து வந்தார்.

அத்துடன்

மீனாட்சியம்மனுக்கு முன்பு, ஆறுகாற்பீடத்தில் இருபெரு வாயிற் காவலர் (துவாரபாலார்) உருவங்களையும் சொக்கநாதர் முன்பு ஆறுகார் பீடத்தில் இருபெரும் வாயிற் காவலர் உருவங்களையும் செய்து வைத்தார்.

அவ்விரண்டு இடங்களிலும், பலி பீடங்களையும், கொடிக் கம்பங்களையும் (துவரஸ்தம்பங்களையும்) அமைத்து அவற்றைப் பொன்னால் கவசம் செய்து மாட்டி அணி செய்தார்.

இத்திருப் பணிகளை ‘மதுரைத் திருப்பணி மாலைச் செய்யுள்கள்’ அறிவிக்கின்றன.

மேலும்திருமலை மீனாட்சியம்மன் கோயிலில் இடிபட்ட பகுதிகளைப் புதுப்பித்த அழகையும், அடுத்ததையும் திருப்பணிமாலை சிறப்பித்துக் கூறுகிறது.

உடைந்த பழங்கற்களையும், உத்திரங்களையும் பிடுங்கி விட்டுப் புதியவற்றை அமைத்து, அரைத்த சுண்ணாம்பை வெல்லச் சாறு விட்டு நன்றாய்க் குழைத்துச் செங்கற்களை அடுக்காகப் பரப்பிக் கடுக்காயுடன் நெல்லிக்காய் உழுந்து இவற்றை ஒருமுறை இருமுறை இடித்து நன்னீரில் ஊறிய கடுஞ்சாறும்விட்டு ஊழிக் காலங்களிலும் அசையாத வக்கிரக்காரை இட்டு மீனாட்சியம்மன் கோயிலின் இடிபட்ட பகுதிகளைச் செப்பனிட்டுப் புதுப்பிக்கச் செய்தார் திருமலை பூபதி என்ற திருமலைநாயக்கர்.

மதுரைத் திருக்கோயிலைத் திருமலைநாயக்கர் நன்று புதுப்பித்ததோடு திருப்பரங்குன்றம்,அழகர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம் பெரிய கோயில்களிலும் திருப்பணிகளைச் செய்துள்ளார்.

இந்த விபரத்தை கள்ளழகர் கோயில் தெற்குச் சுவற்றில் திருமலை நாயக்கரின் உருவம் ஒரு தூணில் இருப்பதைக் காணலாம் .

திருமலை நாயக்கர் – குப்புசாமி
₹160
Buy Link: https://heritager.in/product/thirumalai-nayakkar/