Description
அமைப்பியம் என்பது ‘ஒரு சமூகத்தின் மனம் சார்ந்த சிந்தனை முறையை விளங்கிக் கொள்வதற்கும் கருத்து நிலையின் புலப்பாடுகள் சார்ந்து இயங்கும் அமைப்பு முறையை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படும் ஓர் சிறந்த அணுகுமுறை’ என்று இந்நூலுக்கு கருத்துரை வழங்கிய பக்தவத்சல பாரதி குறிப்பிடுகின்றார். இந்நூலினது நோக்கம் அமைப்பியல் கோட்பாட்டின் ஒரு பகுதியாகிய தொடர்பாட்டு அணுகுமுறையை விரிவாக நாட்டார் வழக்காற்று வகைமைகளில் பொருத்தி ஆராய்வதே. மேலும் இந்நூலானது அமைப்பியல் கோட்பாட்டில் தொடர்பாட்டு அணுகுமுறை, தமிழ் மூடக்கதைகளின் அமைப்பு, பழமரபுக் கதைகளின் அமைப்பு, நாட்டார் கதைகளின் அமைப்பியல் சமன்பாடுகள் என்ற நான்கு பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.






























