சென்னை தலைநகரின் கதை ஒரு மாநகரின் வரலாற்றுப் பயணம்

155

Description

மதராஸ் இன்று நவீன நகரங்களின் பட்டியலில் இணைந்து ‘சென்னை’யாக உருமாறிவிட்ட போதிலும், அதன் தெருக்களில் பழமையின் சுவடுகள் இன்றும் ஆழமாகப் பதிந்துள்ளன. சென்னையின் தொன்மையான கட்டிடங்கள், நூற்றாண்டுகள் கடந்த தங்களின் வாழ்க்கைக்கதையை காற்றின் செவிகளில் இடைவிடாது கிசுகிசுத்துக் கொண்டே இருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்தையே ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக்க அடித்தளமாக விளங்கிய புனித ஜார்ஜ் கோட்டையின் நுழைவாயிலைக் கடக்கும்போது, பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் இன்றும் அங்கு பேசிக்கொண்டிருப்பதை போன்ற உணர்வு நமக்குள் எழுகிறது.

அவர்கள் யார்? இதைப்பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் இந்த நூலைப் படிக்க வேண்டும். மதராஸ் மாநகரம் சென்னையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்ததில் பங்காற்றிய சாதாரண மனிதர்கள் முதல் முக்கியப் பிரமுகர்கள் (VIPs) வரை அனைவரைப் பற்றிய பதிவுகளையும் இந்த நூல் சுமந்து நிற்கிறது. சென்னையின் உருவாக்கம் குறித்து அணு அணுவாக இந்த புத்தகம் விவரிக்கிறது.

Additional information

Weight0.250 kg