Description
கல்வெட்டுக்கள், பட்டயங்கள், இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், தொல்லியல் சான்றுகள், நாணயங்கள், அரசு ஆவணங்கள் ஆகியன வரலாற்று வரைவில் சான்றாதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை மட்டுமன்றி மக்களிடையே வழங்கும் வாய்மொழி வழக்காறுகளும், வழிபாட்டுமுறைகளும் வரலாற்று வரைவிற்கான சான்றுகளாக அமையும் தகுதியுடையன என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. வரலாற்றின் மற்றொரு பகுதியை இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது






























