அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு (பூலோகவியாஸன் 1905-1906)

380

தமிழ்ச் சமூகத்தில் அச்சுப் பண்பாடு, இதழியல், மொழி வளர்ச்சி ஆகியவற்றில் ஆதி திராவிடர்கள் ஆற்றியுள்ள காத்திரமான பங்களிப்புக்குச் சாட்சியாய் நிற்கிறது ‘பூலோகவியாஸன்.

Add to Wishlist
Add to Wishlist

Description

ஐரோப்பியர் அச்சுப் பண்பாட்டை அறிமுகம் செய்த காலத்திலிருந்தே ஆதி திராவிடரின் அறிவு மரபும் இந்தத் துறைக்குப் பங்களித்துவருகிறது. இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள ‘பூலோகவியாஸன்’ அத்தகைய பங்களிப்புகளில் ஒன்று.

1905-06 ஆண்டுகளில் வெளியான இந்த இதழ், திருக்குறள், நீதிசாத்திரம், இலஞ்சம், சாதி, பெண்கள், தத்துவம், தானம், தேகம், தர்பார், உழவர், இசை, மதுவிலக்கு என அனைத்தையும் குறித்து உரையாடியது; றகர, ரகர பேத விளக்கத்தையும் இந்த இதழ் தொடர்ந்து வெளியிட்டுவந்தது.

தமிழ்ச் சமூகத்தில் அச்சுப் பண்பாடு, இதழியல், மொழி வளர்ச்சி ஆகியவற்றில் ஆதி திராவிடர்கள் ஆற்றியுள்ள காத்திரமான பங்களிப்புக்குச் சாட்சியாய் நிற்கிறது ‘பூலோகவியாஸன்’.

Additional information

Weight0.250 kg