Description
மதுரை மாநகரம் தொடர்ந்து இரண்டா யிரத்து ஐநூறு ஆண்டுகட்கும் மேலாக வாழ்ந்தும், வளர்ந்தும் வரும் நகரம். பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட இந்நகரத்தின் சிறப்பு களையெல்லாம் எத்தனை நூல்களில் கண்டாலும் இன்னும் அறியப்படாத செய்திகள் ஏராளமாய் உள்ளன. அவற்றையெல்லாம் தொகுக்கும் முயற்சியின் வெளிப்பாடாக அமைந்துள்ளது தோழர். ந. பாண்டுரங்கன் எழுதியுள்ள இந்நூல் ‘அறியப்படாத மதுரை’. வரலாற்று நோக்கில் கால வரிசைப்படி மதுரையின் பெருமைகளைப் பல நூல்களில் காண்கிறோம். இந்நூல் அவற்றிலிருந்து மாறுபட்டு அண்மைக்காலத் தரவுகளைக் கொண்டு பலதரப்பட்ட செய்திகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. மொத்தம் பத்து தலைப்புகளில் முத்தான செய்திகளைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர்.
- Page: 215