Description
இந்த நூல் 1900 முதல் 2000 வரை தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பல்வேறு சிந்தனைகளின் வரலாற்றைப் புதிய முறையில் விவரிக்கிறது. மொழி சார்ந்து உருவான அரசியல், இலக்கியம் போன்றவை எவ்வாறு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தன, தமிழ்தலைவர்களாலும் இலக்கியவாதிகளாலும் கட்டமைக்கப்பட்ட தமிழடையாளம் எத்தகையது,எல்ல சிந்தனைகளுக்கும் ஈழப்படுகொலையை ஓர் அளவுகோலாகக் கொள்ளலாமா, தமிழக அரசியலின் உள்ளார்ந்த பண்புகளைப் பன்னாட்டு சிந்தனைகலோடு எவ்விதம் ஒப்பிடலாம் போன்ற எதிரும் புதிருமாக இந்நூலில் பேசப்படும் பார்வைகள் புதிய வெளிச்சத்தை அளிக்கின்றன.















