Description
தீண்டாமையின் முதன்மையான முரண்பாடு இயங்கும்
முறைக்குள் ஆதிக்கமும் அடிபணிதலும் செயல்படுகின்றன.
ஆதிக்க ஜாதிகளின் ஏகபோகமும் ஒடுக்கப்படுவோரின் விலக்கலும்
இயங்குவதை நோக்கினால் அதற்குள் வன்முறை இருப்பதை உணரலாம். ஆதிக்க ஜாதிகளுக்கும் ஒடுக்கப்படும் சமூகங் களுக்கும் இடையே தீண்டாமை செயல்படும்போது அவர்களின்
உடல்மொழியும் உரையாடலும் வன்முறையையும் அடங்கிப் போதலையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இந்நூல்.




