கொங்கு நாட்டுப்புற வழக்காறுகள் – முனைவர் தே.ஞானசேகரன் ,முனைவர் சி.சித்ரா ,முனைவர் ச.தங்கமணி ,முனைவர் சு.ஆனந்தவேல், முனைவர் செ.இளையராஜா, முனைவர் ச.கோகுல் கிருஷ்ணன்

1,500

Add to Wishlist
Add to Wishlist
Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.
அள்ளக்கயிறு (ம) வடக்கயிறு விளக்கம் :
அள்ளையில் கயிறு கட்டப்படுவதால் இது அள்ளக்கயிறு என அழைக்கப்படுகின்றது. இது மரம் ஏறும்பொழுது இடுப்புப் பகுதியில் அணிவதால் இடுப்புக்கயிறு என்று அழைக்கப்படுகிறது.
வடக்கயிறு கொட்லா என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு என்பது முட்டை வடிவில் நீள வட்ட அமைப்பு உடையது.
அள்ளக்கயிறு என்பது நீளமாக, மிகவும் வலிமையானதாக இருக்கும். பெரும்பாலும் மரம் ஏறுபவர்களே இதனைச் செய்து கொள்வர்.
அள்ளக்கயிறு (ம) வடக்கயிறு செய்யப்படும் முறை :
காய்ந்த தேங்காய் மட்டைகளை ஒரு வாரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பின் அவை கொட்லா என்று அழைக்கப்படும்.
பொறச மறத்தால் செய்யப்பட்ட கருவி (குச்சி) மூலம் அடிக்க வேண்டும். அவ்வாறு நர் நாராகப் பிரிந்தவற்றைவெயிலில் நன்றாகக் காய வைத்தல் வேண்டும். பின்பு வசதிக்கேற்பச் சிறிய தடிமனாகவும், பெரிய தடிமனாகவும் கயிறைத் திரித்துக் கொள்ளலாம். பொதுவாக மரம் ஏறுபவர்கள் தாங்களாகவே கயிறு திரிப்பதில்லை. தேங்காய் மட்டையிலிருந்து நார் நாராகப் பிரிக்கப்பட்டவற்றை கயிறு திரிப்பவர்களிடம் விற்றுவிடுகின்றனர். பின்பு கயிறாகத் திரிக்கப்பட்ட வடக்கயிற்றைப் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். பொதுவாக மூன்று பிரி உள்ள கயிற்றைப் பயன்படுத்துகின்றனர். பெரியவர்கள், சிறியவர்கள் அனைவருக்கும் பிரி வடக்கயிறு கொடுக்கப்படுகின்றது. ஆனால் சிறியவர்களுக்கான கயிற்றின் நீளம் குறைவாகவும், பெரியவர்களுக்கான கயிற்றின் நீளம் பெரியதாகவும் இருக்கும்.
Weight0.25 kg