Description
கோயில்களில் இறைவன், இறைவி தொடர்புடைய சிலைகள், சிற்பங்கள் மட்டுமல்லாது அவர்களைக் குறித்த தொன்மங்கள், புராணங்கள் ஆகியவற்றில் இடம் பெறும் குறிப்புகளையும் சித்திரமாகவும், சிற்பமாகவும் கலைநயத்துடன் இடம் பெறச் செய்து கோயிலுக்கு வருபவர்களை மயங்கவைக்கும் தன்மையும் கோயிற்கலையின் சிறப்பு எனலாம்.
தமிழகக்கோயில்களின் தோற்றம், வளர்ச்சி அவற்றுக்குப் பின்புலமாக இருந்து ஈடுபாட்டுடன் செயல்பட்ட மன்னர்கள், வள்ளல்கள், மக்கள் ஆகியோரின் பங்களிப்பு ஆகியவற்றைப் படிப்போர் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய, இனிய தமிழில் இந்நூல் கூறுகிறது.




