Description
அக்கால அரண்மனை அந்தப்புரங்களில் பண்ணை மகளிர்க்குக் காவலாளியாக வைக்கப்பட்ட செயற்கையாக அலியாக்கப்பட்ட ஆணைக் குறிக்கும். வட மொழியில் இதனை நபும்சகம் என்பர். தந்தைவழிச் சமூகத்தில் பெண் தனது இயல்பான பால் வாழ்வைத் தற்சுதந்திரமாக வாழ இயலாதவாறு ஆண்பாலின் நுகர்வுக்கு ஏற்றவாறு பெண்பால் நபும்சகமாக ஆக்கப் பட்டிருக்கிறாள், பாலற்ற பெண்பாலாகக் காயடிக்கப்பட்டிருக்கிறாள் என்பதைக் குறிப்பதாக ‘The Female Eunuch’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்த படைப்புகளைப் போல இந்நூல் இல்லாமல் ஆண், பெண் பால்களின் மலட்டுத்தனம், காயடிப்பு. நபும்சகம் ஆகிய சிதைவுகளை வலியுறுத்திக் கூறுகிறது.



