சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல் – முனைவர் க. காந்திதாசன்

80

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாணர்களின் ஆதரவாளர்கள் :
சங்காலச் சமூக அமைப்பில் பாணர்களையும், அவர்கள் சார்ந்த குழுவினரையும் பெருமன்னர்களும், குறுநில மன்னர்களும், வேளிர் தலைவர்களும், பொதுமக்களும் ஆதரித்து அவர்களுக்கான வாழ்க்கை ஆதாரங்களை அளித்துள்ளனர். அவர்களின் கலையைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
பெருமன்னர்கள் :
கரிகால்பெருவளத்தான், பாண்டிய மன்னன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் நலங்கிள்ளி போன்ற பெருமன்னர்கள் பாண் மரபினரைப் பெரிதும் ஆதரித்துள்ளனர்.
குறுநில மன்னர்கள் :
அதியமான் நெடுமானஞ்சி, நாஞ்சில் வள்ளுவன், பண்ணன், பாரி, பேகன், ஆய் அண்டிரன், வல்வில் ஓரி, நல்லியக்கோடன், ஆதனுங்கன், இளந்திரையன், நன்னன், வேண்மான், அவியன், தழும்பன், பிட்டன் போன்ற பல குறுநில மன்னர்களும், பேரூர்த் தலைவர்களும் பாணர்களின் பசிதீர்த்து வறுமைபோக்கிய வள்ளல்களாவர்.
பொதுமக்கள் :
ஐவகை நிலமக்களும், பாண்குழுவினரை வரவேற்றுப் பசிநீக்கி அவர்களை ஆதரித்துள்ளனர். இதனைப் பெரும் பாணாற்றுப்படையும், சிறுபாணாற்றுப்படையும், மலைபடு கடாமும் புலப்படுத்துகின்றன.
Weight0.25 kg