Description
பல இடங்களில் சிலைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். பார்வையாளர்களுக்கு அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட சேதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. தலைமைப் பண்புகளை, தியாகங்களை, வெற்றிகளை, புராண இதிகாசக் காட்சிகளை, சரித்திரத்தின் மறக்கக்கூடாத பக்கங்களை, சிற்பக் கலையின் அபூர்வ நுணுக்கங்களை அவை மௌன மொழியில் விவரித்துக்கொண்டே இருப்பது உண்மை! உலகத்திலேயே உயரமானது. அதிக எடைகொண்டது.
அதிகப் பார்வையாளர்களை ஈர்த்தது போன்ற வியக்கவைக்கும் செய்திகளோடு, பல வரலாற்றுச் சம்பவங்களுக்கான மௌன சாட்சிகளாகவும் அவை திகழ்கின்றன! தமிழ்நாடு, இந்தியா. வெளிநாடுகள் எனப் பலதரப்பட்ட புவியியல் களங்களிலும் நிறுவப்பட்டிருக்கும் உலகப் புகழ்பெற்ற சிலைகளில் சிலவற்றின் தகவல்களும் வரலாறுகளும் நிரம்பிய இந்த நூல் படிப்போர்க்கு நிச்சயம் சுவையூட்டும்!