தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு – முனைவர். தி.சுப்பிரமணியன்
₹180
தமிழ் நாட்டில் பெருங்கற்காலப் பண்பாடு புதிய கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து நிலவியது. தமிழரின் புதிய கற்காலத்துக்குரிய பண்பாடு கி.மு. 2800 தொடக்கம் கி.மு. 500 வரை நிலவியதாகவும், பெருங்கற்காலப் பண்பாட்டின் காலம் கி.மு 500 தொடக்கம் கி.பி. 100 வரை என்றும் கருதப்படுகிறது. சங்ககால நூல்களில் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய கல்பதுக்கை, கல்திட்டை முதலிய ஈமச்சின்னங்கள் பற்றிப் பரவலாக எடுத்தாளப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பெருங் கற்காலப் பண்பாடு, சங்ககாலப் பண்பாட்டின் ஒரு கூறாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.