Description
“நெல்லை” என்று செல்லமாக அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டம் இன்று தமிழகத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நெல்லை மாவட்டம் தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.வரலாற்று சிறப்பு அம்சங்களைக் கொண்ட மிக அழகிய மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம். இந்த மாவட்டம் ஒரு காலத்தில் ‘திருநெல்வேலிச் சீமை’ என அழைக்கப்பட்டது. பாண்டியர்கள் பிரதானமாய் வாழ்ந்த இரண்டாம் பெரும் தலைநகரமாக விளங்கியது. சுருக்கமாக. இந்தத் திருநெல்வேலி நகரம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக சுவாரஸ்யமான வரலாற்று பின்னணியைக் கொண்டது.