Description
அலைந்து திரியும் ஒருவன் தற்செயலாய் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றான். அவளின் மர்மம் நிறைந்த பின்புலம் அறியாமலே அவளோடு தென்கிழக்காசியா நாடுகளைச் சுற்றித் திரியத் தீர்மானிக்கின்றான். இப்பயணத்தின் தூண்டலால் அவனுக்குள் கடந்த கால நினைவுச் சுனைகள் பெருக்கெடுத்து ஓடத்தொடங்குகின்றன.
ஒரு பொதுவான பயணக்கதை போல அல்லாது, இப்புதினத்தின் கதைசொல்லி தனது கடந்தகாலக் காதல் நினைவுகளையும், தன்னோடு பயணிப்பவளின் புதிரான போராட்டக் கதையையும் கூறுகின்றான். அகமும்-புறமும், காதலும்-வீரமும் எனத் தமிழில் தொன்மையும் தொடர்ச்சியுமாக வருகின்ற பண்பாட்டைப் பரிட்சித்துப் பார்க்கும் ஒரு புதினமாக இளங்கோவின் ‘தாய்லாந்து’ புனையப்பட்டிருக்கிறது.


