Menu

இந்து வேதங்கள் அறநெறி பண்பு கொண்டவையா?

சுருதி என்பது வேதங்களைக் குறிக்கிறது; ஸ்மிருதி என்பது சட்டங்களைக் குறிக்கிறது. இவற்றில் கூறப்பட்டவற்றை காரண வாதத்தால் கேள்விக் கேட்கக் கூடாது ஏனென்றால் இவற்றிலிருந்து கடமை (பற்றிய அறிவு) எடுத்துக்காட்டப்பட்டுள்ளது பகுத்தறிவு பேசும் புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு, அறிவுக்கு அடிப்படை ஆதாரங்களான இந்த இரண்டையும் கண்டனம் செய்யும் பிராமணனை, சந்தேகவாதி என்றும், வேதங்களைப் பழிப்பவன் என்றும் நல்லவர்கள் சமூகப் பிரஷ்டம் செய்யவேண்டும். கடமையை அறிய விரும்புகின்றவர்களுக்கு சுருதிதான் மிக உயர்ந்த பிரமாணமாகும்.

பிராமணங்கள் சுருதியில் சேர்க்காமல் விலக்கப்பட்டது ஏன்?

இப்போது நாம் ஸ்மிருதிகள் என்று அழைக்கப்படும் மத இலக்கிய வகையைப் பார்ப்போம் இந்த வகையில் மனு ஸ்மிருதியும் யாக்ஞவல்கிய ஸ்மிருதியும் மிக முக்கியமானவை. ஸ்மிருதிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. ஸ்மிருதிகளை எழுதுவது பிரிட்டிஷார் வருகை வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது. மித்ரமிஸ்த்ரா 57 ஸ்மிருதிகளையும் நீலகண்டா 97 ஸ்மிருதிகளையும், கமலாகர் 131 ஸ்மிருதிகளையும். குறிப்பிடுகிறார்கள். ஸ்மிருதி இலக்கியம். இந்துக்கள் புனிதமாகக் கருதும் வேறு எந்த வகை இலக்கியத்தையும் விட அளவில் பெரிதாக உள்ளது.

ஸ்மிருதிகளுக்கும் வேதங்களுக்கும் இடையிலான உறவுநிலை பற்றிக் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன.

முதலாவதாக, ஸ்மிருதி. தர்ம சாஸ்திர இலக்கியத்தின் ஒரு பகுதியாக ஏற்கப்படவில்லை. 2 போதாயன, கௌண்டின்னிய. ஆபஸ்தர்ம தர்ம சூத்திரங்களைப் போன்ற நூல்களைக் கொண்டது தர்ம சாஸ்திர இலக்கியம் ஆரம்பத்தில் ஸ்மிருதி என்பது சமூகத்தின் கற்றறிந்த தலைவர்கள் ஒப்புக்கொண்டு பரிந்துரைத்த சமூகப் பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் பற்றிய நூலாகவே இருந்தது. பேராசிரியர் அல்டேகர் கூறுகிறார்.

“ஆரம்பத்தில் ஸ்மிருதிகளின் தன்மையும் உள்ளடக்கமும் ‘சதாசாரம்’ என்ற நல்லொழுக்கத்தையே பொருளாகக் கொண்டு அதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ஸ்மிருதிகள் தோன்றிய பின், சதாசாரத்தின் பெரும்பகுதியும் அவற்றில் தொகுத்துக் கூறப்பட்டதால் சதாசாரத்தின் வீச்சு குறைந்து போயிற்று ஸ்மிருதிகளில் கூறப்படாமல் உள்ள பழைய வழக்கங்களையும், ஆரம்பகால தர்ம சாஸ்திரங்களும் ஸ்மிருதிகளும் தொகுக்கப்பட்டபின் சமூக அங்கீகாரம் பெற்ற புதிய வழக்கங்களையுமே அது குறிப்பதாயிற்று”

இரண்டாவதாக ஸ்மிருதிகள் வேதங்கள் அல்லது சுதிகளிலிருந்து முற்றிலும் வேறானவையாகக் கருதப்பட்டன இவற்றின் அதிகாரம் முற்றிலும் வேறு அடிப்படையில் அமைந்திருந்தது. சுருதிகளின் அதிகாரம் தெய்வீகமானது. ஸ்மிருதியின் அதிகாரம் சமூகரீதியானது. இவற்றின் அதிகாரம் பற்றி பூர்வ மீமாம்சை இரண்டு விதிகளைக் குறிப்பிடுகிறது. முதல் விதி. சுருதியின் இரண்டு கூற்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டால் இரண்டுமே அதிகாரமுள்ளவையாகும் என்று கூறுகிறது. இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று வேதங்கள் அனுமதிப்பதாகக் கருதப்பட்டது. இரண்டாவது விதி, சுருதியின் கூற்றுக்கு முரணாக உள்ள ஸ்மிருதியின் கூற்று முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த விதிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டதால், ஸ்மிருதிகளுக்கு வேதங்களைப் போன்ற அந்தஸ்தோ அதிகாரமோ கிடைக்கவில்லை.

ஆனால், ஆச்சரியப்படும்படியாக, பிராமணர்கள் தலைகீழாகக் குட்டிக்கரணம் போட்டு, ஸ்மிருதிகளுக்கு வேதங்களைவிட உயர்ந்த அதிகாரம் கொடுக்கின்ற காலம் ஒன்று வந்தது. பேராசிரியர் அல்டேகர் கூறுகிறார்:

சுருதிகளின் சில கூற்றுகள், காலத்தின் போக்குக்கு ஏற்றதாக இல்லாமல் அல்லது அதனுடன் முரண்படுவதாக இருந்தபோது ஸ்மிருதிகள் இவற்றை நிராகரித்தன. வேதத்தில் கூறப்படும் வழக்கத்தின்படி தெய்வ காரியங்கள் காலையிலும், பித்ருகாரியங்கள் பிற்பகலிலும் செய்யப்பட்டன. பிற்காலத்தில் இன்றைய பிதுர் தர்ப்பணம் வழக்கத்துக்கு வந்தது. காலையில் குளிப்பது என்னும் நடைமுறை வழக்கமாக ஏற்பட்டதனால் இது காலையில் நடத்தப்பட்டது. இவ்வாறு செய்வது மேலே கூறப்பட்ட வேத விதிக்கு நேர் முரணானது. ஆனால் இதில் ஏதும் இல்லை என்று ஸ்மிருதி சந்திரிகா’ வின் ஆசிரியரான தேவம பட்டர் கூறுகிறார்.

தர்ப்பணத்தைத் தவிர மற்ற பிதுர் காரியங்களுக்குத்தான் சுருதியின் விதி கூறப்பட்டதாகக் கருத வேண்டும் என்கிறார். விசுவாமித்திரர். தமக்கு நூறு மகன்கள் உயிருடன் இருந்தபோதும் சுனஸ்ஸேபனை தத்து எடுத்துக் கொண்டதாகச்சுருதி இலக்கியத்திலிருந்து தெரிகிறது; எனவே ஒருவர் தம்முடைய சொந்த மகன்கள் பலர் உயிருடன் இருக்கும்போதே ஒரு மகனைத் தத்து எடுப்பதை இது அனுமதிக்கிறது. ஆனால். இவ்வாறு கருதுவது தவறு என்று மித்ரமிஸ்ரர் கூறுகிறார். ஸ்மிருதி வழக்கமும் ஒரு சுருதி விதியைத்தான் அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும். அது இப்போது காணப்படவில்லை என்றாலும், இருந்ததாகக் கருதவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்”

இந்து வேதங்கள் அறநெறி பண்பு கொண்டவையா?
240/-