அடையாளமாக இருந்தாலென்ன, அளப்பரிய சிந்தனைக் கருவூலமாக இருந்தாலென்ன,மண்ணோ விண்ணோ நீயோ நானோ எதுவாக இருந்தாலென்ன – ஒன்றைத் தேடுவதாக இருந்தால், சலிக்காமல், சலித்தாலும் களைப்பாறிவிட்டு மீண்டும் மீண்டும் தேடுவதாக இருந்தால், இருப்பதை மட்டும் அல்லாமல், கிடைப்பதையும் விரும்புவதையும் எல்லா வற்றையும் சேர்த்துக், குவித்துத்,தேடுகிறபோது. கிடைக்கிற படிமம்,எத்தகையதாக இருக்கும்? கால இட வெளிகளாகிய இயங்கு தளங்களில், ஒன்றில்தொலைநோக்கி நகர்ந்து, நினைவின் விளிம்புகளில் அது மங்கலாகிப் போகும்; அல்லது, மயங்கிக் கலந்தும் போகும்; அல்லது கரைந்தும் படிந்தும் போகும். உள்நோக்கி வந்து மனத்தின் கண்ணாடி வில்லைகளில் பேருருவம் எடுத்துப் பிரமிப்புக் காட்டும் ; அல்லது நிஜத்தைத் தின்று வயிறு புடைத்து நிற்கும்.
ஒன்றைத் தேடுவது, ஒன்றில் இன்னொன்றைத் தேடுவது, ஒன்றை இன்னொன்றாகத் தேடுவது, பலவற்றை ஒன்றாக்க முயலுவது. ஒன்றைப் பலவாகக் காண்பது – எல்லாமே தேவைகளையும் நோக்கங்களையும் சார்ந்ததுதான். கொஞ்சம் தள்ளி நின்று யோசித்தால் இப்படிப் பார்க்கிறதில் அல்லது தேடுவதில், எப்போதும் ஒரு ‘கலகம்’ இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஒரு நோக்கம், அடியோட்டமாக இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஒரு அரசியல், செயல்பட்டுக் கொண்டே தானிருக்கிறது.
தமிழ் எனும் பொருள், பல சமயங்களில் இப்படித்தான் தேடப்படுகின்றது. உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் உரியதாய், நாவுக்குள். செவிக்கும் உரியதாய்க் கண்டறியப்படுகிறபோதெல்லாம் அகவயச் சுழற்சியில்தான் அது தன்னை அடையாளங் காட்டுகின்றது. அதனைத் தாண்டிச் சிலபோது. அதிகார அரசியலில் குத்தீட்டியாகவோ, கேடயமாகவோ. எடுப்பாரின் கைகளை அலங்கரிக்கவும் செய்கின்றது. ஆனால், சமூகத்தை, சமூக நிலைப்பாட்டை, சமூக மாற்றத்தை. ஒரு சமூகத் தேவையைச், சம்பந்தப்படுத்தி அது பார்க்கப்படுவதில்லை. வாயிலைத் திறந்து வழி உசாவித் திடமான பார்வையுடன் தேடினால் மண்ணில் விண்ணைப் பார்க்க முடியும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தமிழுக்குத் தன்னைத் தந்துவிட்டுப்போன பாரதி, இருபத்தொன்றாம் நூற்றாண்டு நோக்கிப் பயணமாகிறான். யாராக? எப்படியாக? இருபதின் மத்தியிலிருந்து தொடர்ந்து பாரதியைப் பற்றிப் பேசிவருகிறோம். விமரிசித்து வருகிறோம். பெரும்பாலும் இவற்றிலெல்லாம் நாம் பாரதியைப் பாரதியின் பரிமாணங்களைத். தடங்களை, தடயங்களைத் தேட விரும்பியிருக்கிறோம். பாரதியை எங்கே. எப்படிக் காணுகிறோம்? ஆனால். இதற்குள் அவன் மட்டும் இல்லை; தமிழும் இருக்கிறது என்பதுதான் முக்கியம் எனவே, பாரதியோடு தமிழை, இந்த உலகத்தை, நாம் தேடியிருக்கிறோம்.
தமிழின் பண்பாட்டு வெளிகள் – தி.சு. நடராஜன்
₹100
Buy Link: https://heritager.in/product/tamilin-panpaattu-veligal/
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?
1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்