Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

மருது பாண்டியர்களின் பேரறிக்கையும் அதன் அரசியலும்

சம்புத் தீவு பிரகடனமும் (அரசியலும்) -உறவு பாலசுப்பிரமணியம் (மார்க்சிய சிந்தனையாளர்) மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம் காலனியாதிக்கத்தை எதிர்த்து விடுதலையை இலக்காக கொண்டு விடுக்கப்பட்ட ஒன்று இப்படியான பிரகடனத்தை வெளியிட வேண்டிய அரசியல் சூழல் அதன் பின்புலத்தை சாரமாக பார்போம். ஜரோப்பாவிலிருந்து பல வணிகத்திற்காக வந்தனர். அவர்கள் வரும் நிலையில் முகலாயப் பேரரசு, விசயநகரப் பேரரசு,…

சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு

மண்டலம், நாடு,கூற்றம் முதல் இராஜேந்திரர் காலத்தில் இராஜராஜப் பாண்டி நாடாக அறியப்படும் பாண்டியர்பகுதி, பிற்காலக் கல்வெட் டொன்றில் பாண்டிமண்டலமாக அறிமுகமாகிறது?’ முதல் ஆதித்தர் கல்வெட்டு, கொடையாளி ஒருவரின் இருப்பிடமாக கங்கபாடியைச் சுட்டுகிறது. கூற்றம் எனும் பெயரில் அமைந்த வருவாய்ப் பிரிவுகளாக உறையூர், உறத்தூர், தஞ்சாவூர் ஆகியன வும் நாடு என அழைக்கப்பட்ட வருவாய்ப் பிரிவுகளாகத் தரம்…

ஒரு சாதியின் உள்கட்டமைப்பு

ஒரு சாதியின் உள்கட்டமைப்பு (Structure of a Caste) ஒரு சாதியைப் பொறுத்தவரை அந்த சாதியில் உறுப்பினராக இருப்பவர் அந்த சாதிக்குள் இருந்து மட்டுமே பெண் எடுக்க முடியும். இந்த அடிப்படையில் ஒரு சாதி என்பது அகமணக்குழுவாக (endogamous group) செயல்படுகிறது. இப்படி அகமணக் குழுவாகத் தமிழகத்தில் இனக்குழுக்கள், சாதி என்ற பெயரில் சுமார் 400க்கு…

பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்

இசைக்கருவிகள் : தவில், நாதசுரம், பம்பை, உறுமி, தமுக்கு, தாளம் (சால்ரா) ஆகிய இசைக்கருவிகள் இணைந்து வாசிக்கும் இசைக்கு நையாண்டி மேள இசை என்றும் நையாண்டி மேளச் செட்டு என்று குழுவினரையும் அழைக்கின்றனர். உறுமி எனும் தோலிசைக் கருவி 14ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் வருகையின்போது இடம்பெற்றிருந்த ஒரு தோலிசைக் கருவியாகும். இக்கருவியை வாசித்தவர் அருந்ததியினர்.இவர்கள் தாழ்த்தப்பட்ட…

பஞ்சரச் சிற்பங்கள்

பஞ்சரச் சிற்பங்கள் : இக்கோயில் விமானத்தின் நான்கு திசைகளிலும் முகமண்ட பத்தின் மூன்று திசைகளிலுமாய்த் திசைக்கு இரண்டென 14 தளப் பஞ்சரங்கள் உள்ளன. அவற்றின் கிரீவகோட்டங்களிலும் அவற்றின் தலைப்பாக விமான, முகமண்டபக் கபோதத்தில் காட்டப் பட்டுள்ள பெருவளைவுகளிலும் எழிலார்ந்த சிற்பச் செதுக்கள் உள்ளன. கிரீவகோட்டச் சிற்பங்கள் : பஞ்சரங்களின் 14 கிரீவகோட்டச் சிற்பங்களுள் ஐந்து சிவ…

க. அயோத்திதாசர் ஆய்வுகள்

க. அயோத்திதாசர் (1845 – 1914) என்ற பௌத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்றி முழு உலகிற்கே ஒளியாக உதித்த கௌதம புத்தரின் அகிம்சையிலிருந்து உருப்பெற்றன. இதில் வன்முறையோ, ஆதிக்கமோ, புரோகிதமோ, சாதியோ, சமயமோ, கடவுளோ கிடையாது. மாறாகக் கருணையும் ஒழுக்கமும் சமத்துவமும் வினைத் தொடர்ச்சியும் உண்டு. ஒவ்வொருவனும் தன்னைப் பகுத்தறிவு மற்றும் அறம்…

பல்லவர்களும் ஓவியக்கலையும்

பல்லவர்களும் ஓவியக்கலையும் : ஒவியக்கலையில் வல்லவனான மகேந்திரவர்ம பல்லவன், சித்திரங்கள் வரைவதிலும் கைதேர்ந்த கலைஞன். எனவே அவன் ‘சித்திரகாரப் புலி’ எனப் போற்றப்பட்டான். அவன் ‘தக்ஷண சித்திரம்’ என்னும் நூலையும் எழுதியுள்ளான். இதனை மாமண்டூர்க் கல்வெட்டு ‘வருத்திம் தக்ஷண சித்திராக்யம்’ எனக் குறிப்பிடுகின்றது. மகேந்திரவர்ம பல்லவன் காலத்து ஓவியங்களுக்குச் சான்றாக சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் விளங்குகின்றன.…

தமிழ் கிறிஸ்தவத்தில் சமஸ்கிருத மந்திரங்கள்

தமிழ் கிறிஸ்தவத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஐரோப்பிய பண்பாட்டு மயப்படுத்தப்பட்ட கத்தோலிக்கம் ஈழத்தில் பரப்பப்பட்ட போது ஈழக் கிறிஸ்தவர்கள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டுக் கூறுகளினின்று முற்றாக அந்நியமயப்படுத்தப்படவில்லை. ”கிறிஸ்தவம் தன்னை ஒரு அந்நிய மதமாக வைத்துக் கொள்ள விரும்பாமல் தமிழுடன் இணைத்து கொள்ளவே விரும்பிற்று. முஸ்லிம்கள் செய்தது போன்று அறபுத்தமிழ் என்ற தற்காப்பு முறை எதையும் வைத்துக்…

ஆங்கிலேயரும் காவல்துறை மறுசீரமைப்பு

ஆங்கிலேயரும் காவல்துறை மறுசீரமைப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் காவல் நிர்வாகம் காவல்காரர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணிபுரிந்த தலையாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தலையாரிகளும், காவல்காரர்களும், பொறுப்பாளிகள் ஆவர். ஏனைய தென்மாவட்டங்களிலும் இத்தகைய காவல்முறை வழக்கில் இருந்தது. காவல்காரர்கள் மற்றும் தலையாரிகளுக்கு நிலக் கொடைகள் அல்லது நிலச்சுங்கவரி வருவாயின் ஒரு பகுதி,…

சிலப்பதிகாரத்தில் கூத்து மரபு

சிலப்பதிகாரத்தில் கூத்து மரபு : நாகரிகத்தின் வெளிப்பாடே கலையாகும். இயல், இசை, நாடகம், கூத்து, கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல்வேறு கலைகள் மற்றும் கலைஞர்கள் வாழ்வு சிறந்து விளங்கியமையைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. சிலம்பின் அரங்கேற்று காதை தமிழர்தம் இசைக்கலை, நாட்டியக் கலை,கூத்துக் கலைக்கும் சிறந்த சான்றாகும். கலைக்கூத்தில் வேத்தியல், பொதுவியல் என இருவகை இருந்தமையைச்…