Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

தமிழகத்தின் ராபீன் ஹூட்டுக்கள் – மக்களைக் கவர்ந்த சமூகம்சார் கொள்ளையர்கள

சமூகச் சூழலாலும் – சமூகக் கொடுமையாலும் கொள்ளையராக மாறியவர்களில் சிலர், தங்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சுரண்டும் வர்க்கத்துடன் பகையுணர்வும், தம்மை பொத்த நடுத்தர்கள் நிலக்களிடம் நட்புணர்வும் கொண்டிருந்தனர். இதனால் கையூட்டுப் பெற்று வளன் பட்டிக்குப் பணம் கொடுப் பவர்கள், கை ஆட்சிப் பெற்று வளம் படைத்தவருக்கு ஆதரவாகப் செயல்படும் அரசு அதிகாசொள் ஆகியோரிடம் கொள்ளையாகத் பதுடன்…

பொட்டுக்கட்டு திருமணம் என்றால் என்ன?

தமிழகத்தில் தேவதாசிகள் பற்றி பல அறிய வரலாற்று தகவல்களைக்கூறும் இந்நூலில், பொட்டுக்கட்டு திருமணம் எவ்வாறு நடைபெற்றது என்பதை முனைவர் கே. சாதாசிவம், “தேவதாசிகளிடையே ‘பொட்டுக் கட்டுதல்’ என்று பிரபலமாக அறியப்பட்டுள்ள மரபு ஒன்று உண்டு. கோயிற் சேவைக்கெனத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வோர் பின்பற்றிய இந்த வெகுமக்கள் வழிமுறையின் மீது இந்தக் காலகட்டத்தின் ஏராளமான தரவுகள் வெளிச்சம்…

சங்ககால பூதமும் துளு நாடும்

சங்க காலத்திலே பூதம் என்னும் தெய்வ வணக்கம் இருந்ததை அறிகிறோம். பதிற்றுப்பத்து. சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பூதவணக்கம் கூறப்படுகிறது. அந்தப் ‘பூதங்கள்’ திருமால், சிவன் போன்ற உயர்ந்த தெய்வங்களைப் போன்ற நிலையில் இல்லாவிட்டாலும் இந்திரன், முருகன் போன்ற உயர்ந்த நிலையில் வைத்து வணங்கப்பட்டன. பிற்காலத்தில் பூதம் என்பதற்குக் கொடிய துர்த்தேவதை, சிறுதேவதை என்னும் பொருள்…

சீதைக்கு சாபம் விடுத்த இலட்சுமணன்

அத்யாத்ம ராமாயணத்தில் இறக்கும் தறுவாயில் மாரீசனாகிய மாயமான் விடுத்த அபயக்குரலைக் கேட்ட சீதை இலக்குவனை நோக்கி, ‘இலக்கு வனே, இராமனின் அபயக் குரல் உனக்குக் கேட்கவில்லையா? உடனே அவனுடைய உதவிக்கு விரைந்து செல்’ என்று கூறினாள். அதைக் கேட்ட இலக்குவன், ‘அது இராமன் குரல் அல்ல; இறக்கும் நிலையில் கதறிய யாரோ ஒரு அரக்கன் குரல்.…

முன்னாள் வலையல் வியாபாரிகளான லம்பாடியர்

சிந்துசமவெளியையும் தமிழகத்தையும் இணைத்த ஓர் குழு. தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலைகளின் அடிவாரங்களில் வாழும் லம்பாடியர் எனும் மலையின மக்கள் 30 குடிகள், 15 குடிகள் என வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தளி, பென்னாகரம் ஆகிய இடங்களிலும், பெரியார் மாவட்டத்தில் நாயக்கர் தண்டா, (போமியா தண்டா) தேவலாந்தண்டா, புதுத்தண்டா, புருவந்தண்டா…

மாமல்லபுரம்

பல்லவர் வரலாறு ‘பல்லவர்’ என்ற அரசமரபினர் எங்குத் தோன்றினர்? எங்கிருந்து தமிழகத்திற்கு வந்தனர்? அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது தமிழரல்லாத வேற்றினத்தவரா? என்ற பல வினாக்களுக்கு உறுதியான, முடிவான விடை இதுவரையிலும் எட்டப்பெறவில்லை. இவர்கள், மேற்கிந்தியப் பகுதிகளிலும் சிந்துவெளியிலும் வாழ்ந்திருந்த பஹ்லவர் அல்லது பார்த்தியர் என்றழைக்கப்பட்ட இனத்தவர் என்றொரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. சோழன் வெள்வேற்…

சங்ககால மறவர்

மறவர்க்கு அளிக்கப்படும் பட்டங்கள் : மறவர்களுக்கு வேந்தன் செய்யும் பல சிறப்புகளில் பட்டங்கள் அளித்துப் போற்றுவதும் ஒன்றாம். இதன்படி ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களைச் சிறப்பு வாய்ந்த படைத் தலைவர்களுக்குச் சூட்டுவதுண்டு. இதனை “மாராயம்” என்று குறிப்பிடுகிறது தொல்காப்பியம். இப்பட்டங்களைச் சூடும்பொழுது அதற்குரிய மோதிரம் ஒன்றும் அரசனால் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனை ‘மாராயம் பெற்ற…

தமிழ்க் கதைப்பாடல்கள்

வரலாற்றுக் கதைப்பாடல்கள் : இடைச்சி செல்லிகதை ஏடு, இரவிக்குட்டி பிள்ளை போர், இராமப்பையன் அம்மானை, உடையார் கதை, உலகுடையார் கதை . எட்டு கூட்ட தம்புரான் கதை, ஐவர் ராசாக்கள் கதை, ஓட்டன் கதை, கட்டபொம்மன் கும்மி, கட்டபொம்மன் கூத்து, சுட்டபொம்மன் கதைப்பாடல், கன்னடியன் போர், காடராசன் கதை, (கை.எ.பி) கான்சாகிப் சண்டை, காஞ்சிமன்னர் அம்மானை…