Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

பெண்களின் அடிமை முறைகள்

பெண் அலுவலர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது கோவி ராககேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராசராச தேவரின் அப்பத்திரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1248) பொறிக்கப் முப்பத்தாகும். இராசேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்றில் உலோகமாதே வீச்சுரம் உடையார் கோவிலுள்ளது. அக்கோவிலுக்கு ஊர் அலுவலர்களின் கண்காணிப்பில் பொன்னாலான அணிகள் பல செய்யப்பெற்றன. அவ்வணிகலன்களைக்…

பழங்குடி மக்களின் இயற்கைப் பாதுகாப்பு முறைகள்

காணிக்காரன் : தமிழகத்திலும், கேரளத்திலும் காணி என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பொதிய மலைப் பகுதியில் காணிகள் வாழ்கின்றனர். மலை சார்ந்ததும் நீர் நிலைகளின் வளம் மிக்கதுமாகிய பகுதிகளில் காணிகள் வாழ்ந்து வருகின்றனர். இப்பழங்குடியினரின் வாழ் விடங்களானது 90 மீட்டர் முதல் 700 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன.…

வேந்தரும் குறுநிலத் தலைவரும்

வேந்தரும் குறுநிலத் தலைவரும் : சங்க இலக்கியங்கள் ஏறத்தாழ அறுபத்தொரு வேந்தர் களையும், பல குடிகளைச் சார்ந்த ஏறத்தாழ நூற்றிருபத் தெட்டுக் குறுநிலத் தலைவர்களையும் பற்றிக் கூறுகின்றன! வேந்தர் குடியினரை விடக் குறுநில மன்னர் குடியினர் எண்ணிக் கையில் மிகுந்துள்ளமை காணத்தக்கதாகும். குன்றுகளாலும், காடுகளாலும், ஆறுகளாலும் ஊடறுக்கப்பட்ட தமிழகம் பல துண்டுகளாகப் பிரிந்திருந்தது. ஒவ்வொரு துண்டிலும்…

தொழிலாளர் தோற்றம்

தொழிலாளர் தோற்றம் : நவீன மோட்டார்களின் பெருக்கமும் இவற்றை இயக்கும் நவீனத் தொழிலாளர்களும் பாரம்பரியப் போக்குவரத்துச் சாதனங்களையும் அவற்றை இயக்கியத் தொழிலாளர்களையும் அப்புறப்படுத்தத் தொடங்கியது. இப்போக்கை, “ஸைக்கிள்களும் மோட்டார்களும் இப்படி அதிகமாய் இறக்குமதியாக, குதிரைகள் இறக்குமதியாவது குறைந்து விட்டது .1910-11 இல்1006 குதிரைகள் வந்து இறங்கி இருக்க, இந்த 1911-12ஆம் வருஷத்தில் 780 குதிரைகளே வந்து…

இந்தியாவின் முதல் இராம பரிவாரம்

இந்தியாவின் முதல் இராம பரிவாரம் : இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பண்டைய நடுநாட்டுத் தலமான திருக்கோவலூர், பல்லவர் காலந்தொட்டுப் புகழ் பெற்றிருந்த சைவ வைணவப் பதியாகும். இங்குள்ள சைவப் பெருங் கோயிலான வீராட்டனேசுவரர் கோயில், அப்பர். சம்மந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற பெருமையுடையது. அட்டவீரத் தலங்களுள் ஒன்றாக அந்தகாசுர வதம்…

இறந்த தலைவனுக்காக போர் செய்து மாண்ட வீரர்கள் பற்றிய நடுகற்கள் பண்பாடும்

நடுகற்கள் பண்பாடு : செங்கம் வட்டம், தா.வேளூரை சேர்ந்த நடுகல் ஒன்று பெண்ணின் மானத்தைக் காத்த வீரனைப்பற்றிக் கூறுகிறது. முருங்கைச்சேரியை சேர்ந்தவன் காளமன். இவன் தனது அண்ணன் மகளைக் கள்ளர்கள் கடத்திக் கொண்டு போவதை அறிந்தான். உடனே அவன் அந்தக் கள்ளர்களைப் பின் தொடர்ந்து சென்றான். அதன் பின் அந்த கள்ளர்களிடம் போரிட்டான். அந்த போரில்…

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் : தென்னிந்தியாவின் ஒரு கிராமத்தில் காலராவோ, பெரியம்மையோ தாக்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது தெலுங்கு நாட்டின் ஒரு பின் தங்கிய மாவட்டத்தில், புகைவண்டியோ அல்லது பிராமணர்களின் ஆதிக்கமோ இல்லாத ஒரு கிராமம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே என்ன நடக்கும் என்று பார்ப்போம். ஒரு தெலுங்குக் கிராமம். இந்தக்…

முத்தரையர் என்ற சொல்லின் பொருள் குறித்து டாக்டர் இரா.நாகசாமி கூறும் கருத்துக்கள்

‘முத்தரையர்’ என்ற சொல்லின் பொருள் குறித்து டாக்டர் இரா.நாகசாமி கூறும் கருத்துக்கள் : “ஏறக்குறைய கி. பி. 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன் மிகச் சிறந்த தீரனாகவும் அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்கதுர்விநீதன் “முத்தரையர் என்றால் என்ன பொருள் என்றும் தன் செப்பேட்டில்கூறிபருத்திறான். இவனது செப்பேடு இரு மொழிகளில் உள்ளது. 121…

சோழ, கேரளத் தொடர்புகள்

சோழ, கேரளத் தொடர்புகள் : சோழ, கேரளத் தொடர்புகளைப் பற்றிய முதல் செய்தியைத் தருவது தில்லைதானத்திலுள்ள இராசகேசரியின் கல்வெட்டு. 1 ஸ்வஸ்திஸ்ரீ தொண்டைநாடு பரவின சோழன் பல் 2 யானைக் கோக்கண்டனாயின ராசகேசரி பன்மனா 3 லுஞ் சேரமான் கோத்தாணு இரவியாலும் தவிசுஞ்சா 4 மரையும் சிவிகையும் திமிலையும் கோயிலும் போனக 5 மும் காலமும்…

பாறை ஓவியங்களில் தாய்த்தெய்வம்

பாறை ஓவியங்களில் தாய்த்தெய்வம் சங்க இலக்கியத்தில் அணங்கு என்ற சொல் பல பொருள்களில் வழங்கப்பெற்றுள்ளன. சங்ககாலம் முதல் இடைக் காலம் வரை திகண்டு ஒரே மாதிரியான பொருளிலேயே வழங்கப்பெற்றுள்ளது. அவையாவன வருத்தம், இறந்துவிடுதல், நோய் அச்சம், கொலை, தெய்வம்,மையல் நோய், தெய்வ மகள், வருத்திக் கொல்லும் தெய்வ மகள், தெய்வத்துக்கொப்பான மாதர், வெறியாட்டு, பேய், அழகு,…