Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

அதியமான்கள் – வரலாற்று சுருக்கம்

தகடூர் வீழ்ச்சிக்குப் பின்னர் வரலாற்றுத் தொடக்கக் காலத்திய அதியமான் மரபு குறித்த செய்திகளை அறிய இயல வில்லை. மழகொங்குப் பகுதியில் பாண்டியரால் வெற்றி கொள்ளப்பட்ட அதியர்கள், அதியமான் மரபின் வழித் தோன்றலாவர். ‘அதியமான்’ எனும் தமிழ்ச் சொல்லே வட மொழியில் அதியர் எனப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டிய அரசர்கள் மழகொங்குப் போரில் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளமையால் அதியமான்…

யார் கைகளில் இந்து ஆலயங்கள்?

பல்வேறு மதங்களும் அதன் கோவில்களும் கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல்போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மிக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். ஆனால் மரங்களும், சாலையோரக் கற்களும்கூட கோயிலாகக் கருதப்படும் வழக்கமும் நமது சமூகத்தில் உண்டு. மனிதகுல வரலாற்றில் தன் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை நிகழ்வுகளை வணங்கவோ, பயம் கொள்ளவோ செய்த மனித…

தொல்லியல் நோக்கில் குறுமன்ஸ் பழங்குடி

குலமுறை அமைப்பு : குறுமன்ஸ் பழங்குடி சமுதாயம் குலமுறை சமுதாயம், குலங்களை அடிப்படையாகக் கொண்டது. குலமுறை சமுதாயம் தமிழகத்தில் பல இன மக்களிடையில் காணப்படுகின்றது. ஆனால் இம்முறை மற்ற சமுதாயத்தினரிடம் அதிகம் இல்லை. சில நேரங்களில் மட்டும் தென்படுகின்றது. மாறிவரும் நாகரிக உலகில் குலமுறை என்பது கடைபிடிக்கப்படாததாக உள்ளது. சமுதாயத்தில் மக்களின் தொகை கூடும்போதும், வெளியிலிருந்து…

கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்

கேரளக் கோவில்களில் பிராமணர் அல்லாதார்களில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு உரிமையும் பங்கேற்பும் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது கொடுங்கல்லூர் கோவிலே. மலையாந்தட்டான் புலையர்,குடும்பர், குறுமார் (குறும்பர்), அரையர், வள்ளுவர் என சில சாதியினரின் உரிமை இன்றளவும் நிலை நாட்டப்படுகிறது. குறும்பா என்னும் குறுமான் சாதியுடன் கண்ணகியை இணைக்கும் வாய்மொழிச் செய்திகள் சில தொகுக்கப்பட்டுள்ளன. கேரள வயநாடு…

கொங்கு வேளாளர் சீர்களும் இலக்கியங்களும்

‘கம்பர் வாழி’ என்னும் நூல் 16 பாடல்களையுடையது. இந்நூலுக்குக் ‘கம்பர் வாழி பதினாறு’ என்றும் பெயர் உண்டு. தனி ஏடாகக் கிடைத்த இந்நூலை திருச்செங்கோடு முத்துசாமிக்கோனார் முதலில் பதிப்பித்தார். கொங்கு வேளாளர் திருமணங்களில் குடிமகன் என்னும் மங்கலன் (நாவிதர்) ‘மங்கல வாழ்த்து’ இசைப்பதற்கு முன் காணிப் புலவரால் இவை பாடப்பட்டன. மணமக்கள் வீட்டாரின் குலப்பெருமை, குடிப்பெருமை,…

மருது பாண்டியர்களின் பேரறிக்கையும் அதன் அரசியலும்

சம்புத் தீவு பிரகடனமும் (அரசியலும்) -உறவு பாலசுப்பிரமணியம் (மார்க்சிய சிந்தனையாளர்) மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம் காலனியாதிக்கத்தை எதிர்த்து விடுதலையை இலக்காக கொண்டு விடுக்கப்பட்ட ஒன்று இப்படியான பிரகடனத்தை வெளியிட வேண்டிய அரசியல் சூழல் அதன் பின்புலத்தை சாரமாக பார்போம். ஜரோப்பாவிலிருந்து பல வணிகத்திற்காக வந்தனர். அவர்கள் வரும் நிலையில் முகலாயப் பேரரசு, விசயநகரப் பேரரசு,…

சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு

மண்டலம், நாடு,கூற்றம் முதல் இராஜேந்திரர் காலத்தில் இராஜராஜப் பாண்டி நாடாக அறியப்படும் பாண்டியர்பகுதி, பிற்காலக் கல்வெட் டொன்றில் பாண்டிமண்டலமாக அறிமுகமாகிறது?’ முதல் ஆதித்தர் கல்வெட்டு, கொடையாளி ஒருவரின் இருப்பிடமாக கங்கபாடியைச் சுட்டுகிறது. கூற்றம் எனும் பெயரில் அமைந்த வருவாய்ப் பிரிவுகளாக உறையூர், உறத்தூர், தஞ்சாவூர் ஆகியன வும் நாடு என அழைக்கப்பட்ட வருவாய்ப் பிரிவுகளாகத் தரம்…

ஒரு சாதியின் உள்கட்டமைப்பு

ஒரு சாதியின் உள்கட்டமைப்பு (Structure of a Caste) ஒரு சாதியைப் பொறுத்தவரை அந்த சாதியில் உறுப்பினராக இருப்பவர் அந்த சாதிக்குள் இருந்து மட்டுமே பெண் எடுக்க முடியும். இந்த அடிப்படையில் ஒரு சாதி என்பது அகமணக்குழுவாக (endogamous group) செயல்படுகிறது. இப்படி அகமணக் குழுவாகத் தமிழகத்தில் இனக்குழுக்கள், சாதி என்ற பெயரில் சுமார் 400க்கு…

பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்

இசைக்கருவிகள் : தவில், நாதசுரம், பம்பை, உறுமி, தமுக்கு, தாளம் (சால்ரா) ஆகிய இசைக்கருவிகள் இணைந்து வாசிக்கும் இசைக்கு நையாண்டி மேள இசை என்றும் நையாண்டி மேளச் செட்டு என்று குழுவினரையும் அழைக்கின்றனர். உறுமி எனும் தோலிசைக் கருவி 14ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் வருகையின்போது இடம்பெற்றிருந்த ஒரு தோலிசைக் கருவியாகும். இக்கருவியை வாசித்தவர் அருந்ததியினர்.இவர்கள் தாழ்த்தப்பட்ட…

பஞ்சரச் சிற்பங்கள்

பஞ்சரச் சிற்பங்கள் : இக்கோயில் விமானத்தின் நான்கு திசைகளிலும் முகமண்ட பத்தின் மூன்று திசைகளிலுமாய்த் திசைக்கு இரண்டென 14 தளப் பஞ்சரங்கள் உள்ளன. அவற்றின் கிரீவகோட்டங்களிலும் அவற்றின் தலைப்பாக விமான, முகமண்டபக் கபோதத்தில் காட்டப் பட்டுள்ள பெருவளைவுகளிலும் எழிலார்ந்த சிற்பச் செதுக்கள் உள்ளன. கிரீவகோட்டச் சிற்பங்கள் : பஞ்சரங்களின் 14 கிரீவகோட்டச் சிற்பங்களுள் ஐந்து சிவ…