Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

க. அயோத்திதாசர் ஆய்வுகள்

க. அயோத்திதாசர் (1845 – 1914) என்ற பௌத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்றி முழு உலகிற்கே ஒளியாக உதித்த கௌதம புத்தரின் அகிம்சையிலிருந்து உருப்பெற்றன. இதில் வன்முறையோ, ஆதிக்கமோ, புரோகிதமோ, சாதியோ, சமயமோ, கடவுளோ கிடையாது. மாறாகக் கருணையும் ஒழுக்கமும் சமத்துவமும் வினைத் தொடர்ச்சியும் உண்டு. ஒவ்வொருவனும் தன்னைப் பகுத்தறிவு மற்றும் அறம்…

பல்லவர்களும் ஓவியக்கலையும்

பல்லவர்களும் ஓவியக்கலையும் : ஒவியக்கலையில் வல்லவனான மகேந்திரவர்ம பல்லவன், சித்திரங்கள் வரைவதிலும் கைதேர்ந்த கலைஞன். எனவே அவன் ‘சித்திரகாரப் புலி’ எனப் போற்றப்பட்டான். அவன் ‘தக்ஷண சித்திரம்’ என்னும் நூலையும் எழுதியுள்ளான். இதனை மாமண்டூர்க் கல்வெட்டு ‘வருத்திம் தக்ஷண சித்திராக்யம்’ எனக் குறிப்பிடுகின்றது. மகேந்திரவர்ம பல்லவன் காலத்து ஓவியங்களுக்குச் சான்றாக சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் விளங்குகின்றன.…

தமிழ் கிறிஸ்தவத்தில் சமஸ்கிருத மந்திரங்கள்

தமிழ் கிறிஸ்தவத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஐரோப்பிய பண்பாட்டு மயப்படுத்தப்பட்ட கத்தோலிக்கம் ஈழத்தில் பரப்பப்பட்ட போது ஈழக் கிறிஸ்தவர்கள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டுக் கூறுகளினின்று முற்றாக அந்நியமயப்படுத்தப்படவில்லை. ”கிறிஸ்தவம் தன்னை ஒரு அந்நிய மதமாக வைத்துக் கொள்ள விரும்பாமல் தமிழுடன் இணைத்து கொள்ளவே விரும்பிற்று. முஸ்லிம்கள் செய்தது போன்று அறபுத்தமிழ் என்ற தற்காப்பு முறை எதையும் வைத்துக்…

ஆங்கிலேயரும் காவல்துறை மறுசீரமைப்பு

ஆங்கிலேயரும் காவல்துறை மறுசீரமைப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் காவல் நிர்வாகம் காவல்காரர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணிபுரிந்த தலையாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தலையாரிகளும், காவல்காரர்களும், பொறுப்பாளிகள் ஆவர். ஏனைய தென்மாவட்டங்களிலும் இத்தகைய காவல்முறை வழக்கில் இருந்தது. காவல்காரர்கள் மற்றும் தலையாரிகளுக்கு நிலக் கொடைகள் அல்லது நிலச்சுங்கவரி வருவாயின் ஒரு பகுதி,…

சிலப்பதிகாரத்தில் கூத்து மரபு

சிலப்பதிகாரத்தில் கூத்து மரபு : நாகரிகத்தின் வெளிப்பாடே கலையாகும். இயல், இசை, நாடகம், கூத்து, கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல்வேறு கலைகள் மற்றும் கலைஞர்கள் வாழ்வு சிறந்து விளங்கியமையைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. சிலம்பின் அரங்கேற்று காதை தமிழர்தம் இசைக்கலை, நாட்டியக் கலை,கூத்துக் கலைக்கும் சிறந்த சான்றாகும். கலைக்கூத்தில் வேத்தியல், பொதுவியல் என இருவகை இருந்தமையைச்…

தெய்வங்களும் சமூக மரபுகளும்

தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப. வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு…

பாண்டியன் நின்றசீர் நெடுமாறன்

பாண்டிய நாட்டில் பௌத்த சமயத்தை விடச் சமண சமயமே செல்வாக்குடன் விளங்கியது. பௌத்த சமயத்தவரை விடச் சமண சமயத்தவரே சைவ, வைணவர்களின் பொது எதிரிகளாக விளங்கினர். இதற்குக் காரணம் சமணர்களின் செல்வாக்கு முழுமையாக அழியாது ஆங்காங்கே நிலைத்து நின்றமை காரணமாகும். பாண்டிய நாட்டில் யானைமலை போன்ற இடங்களிலும், நகரங்களிலும் ஏராளமான சமணர்கள் இருந்தனர் என்பதைச் சம்பந்தரின்…

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள்

சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள் : பழந்தமிழர்கள் நகரங்களை உருவாக்குவதில் திறமைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படைப் போன்றவை விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அதைப் போலவே சிலம்பு, மேகலை காப்பியங்களும் நகரங்கள் குறித்தும் அங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றன என்பதை சுட்டிக்காட்டும்…

ரிக் வேதகால ஆரியர்கள்

1.சிந்து இனம் (பணி) சிந்துப் பள்ளத்தாக்கில் நுழைந்தபோது ஊர்சுற்றி ஆரிய குதிரை வீரர்களை எதிர்த்து நின்ற இனம் உண்மையில் சிந்துப் பள்ளத்தாக்கில் மிக உயர்ந்த நிலையில் இருந்த இனமாகும். அவ்வினத்தின் நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சோதாரோ, ஹரப்பாவிலே கிடைத்துள்ளன. அதன் கலாசாரச் சின்னங்கள் தெற்கிலே குஜராத்வரையிலும், கிழக்கிலே யமுனா பள்ளத்தாக்கு வரையிலும் கிடைத்துள்ளன. கிழக்கில் அவை இன்னும்…

நாலந்தா

நவீன காலத்தில் பரகாவ் (வட கிராமம் -ஆலமர கிராமம்) என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி ஆரம்பகால சமண பௌத்த நூல்களில் அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராஜகிருஹ நகரத்தின் வளம் கொழிக்கும் புறநகர்ப்பகுதி (பாஹிரியா) நாலந்தா மஹாவீரர் 14 சதுர்மாஸ்யங்களை (பயணங்களில் இருந்து ஓய்வு எடுக்கும் மழைக்காலங்களை) இங்குதான் கழித்தார் என்று சமண நூல்களில் இருந்து தெரியவருகிறது. ராஜகிருஹத்தில்…