Category சோழர்

சோழர் மற்றும் சேரர் போர்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

சோழநாட்டரசன் பெரும்பூண் சென்னி என்பவன், தன்னுடைய சேனாதிபதியாகிய பழையன் என்பவன் தலைமையில் பெருஞ்சேனையை அனுப்பி வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின்மேல் போர் செய்தான். இளஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சியின் கீழிருந்த கட்டூரைச் சோழன் சேனாதிபதி பழையன் எதிர்த்தான்.இளஞ்சேரல் இரும்பொறைக்குக் கீழடங்கியிருந்த சிற்றரசர்களாக நன்னன் (நன்னன் உதியன்). ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலானவர் பழையனை…

இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள்

நாட்டின் பெயராக அமைந்த ஊர்கள் பல பிற்காலத்தில் பிரமதேயமாகவும், நகரமாகவும் தேவதானமாகவும் மாற்றம் பெற்றுள்ளது. நாடுகளுக்கு பெயரிடுவதில் வேறு வகையும் இருந்திருக்கின்றன. அவை கூற்றம், வளநாடு, ஆற்றுப்போக்கு, குளக்கீழ் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன. இவை இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற முறையில் இடம்பெற்ற பெயர்களாகும். ஆனால் நாடு, கூற்றம் போன்ற வழக்கமே அதிகளவில் இருந்திருக்கின்றன. குளகீழ், ஆற்றுப்போக்கு…

கஜினி முகமது நடத்திய தாக்குதல்

சோமநாதர் ஆலயத்தின் மீது கஜினி முகமது நடத்திய தாக்குதலின் தொடர் விளைவுகளாக நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றியது இந்த ஆய்வு, வரலாறு எழுதியலில் என்னுடைய ஆர்வத்தின் விளைவாக தொடக்க நிலையில் வளர்ந்து எழுந்த ஓர் ஆய்வு இது. ஒரு கருத்தரங்கில், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் சமர்ப்பித்த ஓர் ஆய்வுக் கட்டுரையாகத்தான் இது முதலில் தொடங்கியது.…

சோழ, கேரளத் தொடர்புகள்

சோழ, கேரளத் தொடர்புகள் : சோழ, கேரளத் தொடர்புகளைப் பற்றிய முதல் செய்தியைத் தருவது தில்லைதானத்திலுள்ள இராசகேசரியின் கல்வெட்டு. 1 ஸ்வஸ்திஸ்ரீ தொண்டைநாடு பரவின சோழன் பல் 2 யானைக் கோக்கண்டனாயின ராசகேசரி பன்மனா 3 லுஞ் சேரமான் கோத்தாணு இரவியாலும் தவிசுஞ்சா 4 மரையும் சிவிகையும் திமிலையும் கோயிலும் போனக 5 மும் காலமும்…

சோழன் செங்கணான் – தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால்

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால் சோழன் செங்கணான்: பழந்தமிழ் இலக்கியம் என்னும்போது அது பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவைகளையே பொதுவாக உணர்த்தும். பதினெண் கீழ்க்கணக்கு என்ற தொகையில் அடங்கிய பதினெட்டு சிறுநூல்களுள் ஒன்றான “களவழி நாற்பது’ என்னும் நூலின் இறுதியில், “சோழன் செங்கணானும் சேரமான் கணைக்கால்…

சோழர்கள் கடற் போர்கள் துவங்க காரணமான வணிகக் குழுக்கள்.

படம்: இலங்கையில் சோழ கடற்படைகளை வரவேற்கும் ஐநூற்றுவ வணிகர்கள். தென்னக மற்றும் சோழ மன்னர்கள் கடல்கடந்து மற்ற நாடுகளில் காலடித்தடம் பதிப்பதில் பேருதவியாகவும், நாட்டின் நிலமை, படைபலம், எந்த நேரத்தில் தாக்கவேண்டும் என்ற தகவலும் அளித்தவர்கள் வணிகர்கள். குறிப்பாக சோழர்களின் இலங்கை வெற்றியை சரியான நேரத்தில் கணித்து, தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்தவர்கள் ஐநூற்றுவ வளஞ்சியர்…

தை மாதத்தில் தமிழ் ஆண்டு பற்றிக் கூறும் கல்வெட்டு

சோழர்‌ கல்வெட்டுகளில்‌ யாண்டு கணக்கு – நடன காசிநாதன்‌ அவர்கள், மற்றும் கே.வி. ஷர்மா ஆகியோரின் எழுதியக் கட்டுரைகளிலிருந்து. கல்வெட்டுகளில் ஆண்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌: ஒரு நிகழ்ச்சி எப்பொழுது நிகழ்ந்தது என்பதைக்‌ கணக்கிட்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌ இந்தியாவில்‌ கி.மு. 6-ஆம்‌ நூற்றாண்டிலிருந்து இருந்து வந்திருக்கிறது. அச்காலத்தில்‌ குறிப்‌பிடத்தக்க வகையில்‌ நிகழ்ந்த எதாவது ஒரு நிகழ்ச்சியை மையமாகக்‌…

கரிகாலச் சோழரின் முன்னோர் செய்த தொழில் – Heritager.in

கடற்காற்றை பயன்படுத்தி ஆப்ரிக்காவுக்கும், இந்திய நிலப்பரப்புக்கும் இடையான பகுதிகளுக்கு பாய்மர நாவாய் செலுத்தியது இந்திய நிலப்பரப்பை சேர்ந்த கடல் வணிகர்கள் என்பது, கிரேக்க ரோமானிய வரலாற்று கூறும் தகவலாகும். ரோமானியருக்கும் காற்றை பயன்படுத்தி தென்னிந்தியாவிற்கு வழிகாட்டியவன் ஒரு இந்திய கடலோடி என்பது ரோமானிய தொல்பழங்கால வரலாறு. அதனால் தான் ரோமாபுரியுடனான வணிகத்தில் சங்க காலத் தமிழகம்…

கல்லணையின் முதல் வரைபடம்

1777 ஆம் ஆண்டு ஆங்கிலேய கால ஆவணத்திலிருந்தத் தகவலின் அடிப்படையாகக் கொண்டு காவிரி கல்லணையின் அமைப்பினைக் குறிக்க டெல்லி ஐஐடி ஆய்வாளர்கள் வரைந்த வரைபடமாகும். சோழ நாட்டில் பாயும் காவிரி கொள்ளிடம் இரண்டு ஆறுலாக பிரியும் இடத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த கல்லணை அமைந்துள்ளது. கல்லணையின் மிக முக்கிய பணியாக கருதப்படுவது…

சோழர் காலத்தில் அரசு பணியில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு.

ஒருவேளை சோழர்காலத்தில் அரசு பணியில் இட ஒதுக்கீடு இருந்திருந்தால் அது எத்தனை சதவீதம் இருந்திருக்கும். ? சோழர்காலத்தில் எவ்வளவு பிராமணர்கள் அரசு அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்பது பல்வேறு காலகட்டத்தில் வரும் பிராமண அதிகாரிகளின் பெயர்கள், அதன் எண்ணிக்கை என்பதை கல்வெட்டுகளில் வாயிலாக அறியலாம். கல்வெட்டுகளில் வரும் பெயர்களை புள்ளியியல் அடிப்படையில் வகைபடுத்தி, பிராமணர்கள் எத்தனை சதவீதம்…