Description
படியேற்றம் என்றால் சிம்மாசனத்தில் ஏறி முடி சூட்டிக் கொள்ளுதல் என்று பொருள். இது ஒரு வரலாற்று நாவல். மூவேந்தர் காலத்து இசையும், ஆடலும் வளம் பெற்று கலையும் கலைஞர்களும் சிறப்புப் பெற்றனர் என்பதை இந்த நூல் அருமையாக எடுத்துரைக்கிறது.காவிரிக் கரையிலிருந்து திருவிதாங்கூருக்கு பத்மனாபபுரம் வழியாகவே நாவல் பயணிக்கிறது. கதாநாயகி காவேரியின் இளமைக் கால வாழ்க்கை, சங்கீதத்தில் கற்று தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றது, அவர் திருவிதாங்கூர் அரண்மனைக்கு சென்று சங்கீதம் பயில்வது…என்று நூலாசிரியர் தனக்கே உரிய பாணியில் எடுத்துரைக்கிறார். நாவலின் தொடக்கத்தில் காவேரி ஆற்றின் சிறப்புகளை வர்ணித்திருப்பதில் புதிய தகவல்களை அறிய முடிகிறது




























