Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள்

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள் பாண்டியநாட்டில் அழகன்குளம், கீழடி, மாங்குடி, கொற்கை அகழாய்வுகளில் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் நூற்றுக்கு மேற்பட்டுக் கிடைத்துள்ளன. தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானையோடுகளில் பல வணிகர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் வடமொழிப் (பிராக்கிருதம் -சமஸ்கிருதம்) பெயர்களும் தமிழ் மொழிப் பெயர்களும் காணப்படுகின்றன. மேலும் இவற்றில் தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிப் பெயர்களும் உள்ளன. கீழடியில் நடைபெற்ற…

இந்து – சைவம் – வைணவம் – ஓர் அறிமுகம்

மனிதன் நல்வழிப்படும் மார்க்க நெறியே சமய நெறியாகும். பிற சமயங்கள் ஒரே தலைவரை தங்களின் சமய முதல்வராக ஏற்றுக்கொள்ள, இந்து சமயமோ ஒரே நெறியை வலியுறுத்துகிறது. அந்த நெறி பரந்தது. அந்த நெறியில் சென்று வெற்றியடைந்த அனைவரையும் இந்து சமயம் தலைவராக ஏற்றுக் கொள்கிறது, வணங்குகிறது. இந்தியப் பண்பாட்டின் அடித்தளத்தில் இருந்து இந்திய மக்களிடையே தோன்றிய…

உத்தரநல்லூர் நங்கை

உத்தரநல்லூர் நங்கை: சமத்துவமும் உரிமையும் கோரி எதிர்ப்புக் குரல் கொடுத்த முதல் தமிழ்ப்பெண்மணி, புரட்சி மங்கை, 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உத்தரநல்லூர் நங்கை என்ற தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவரே என்று தமிழிலக்கிய வரலாறு காட்டுகிறது. இவர் பாய்ச்சலூர்க் கிராம மக்கள் காட்டிய சாதி வேற்றுமைக்குக் கண்டனக்குரல் எழுப்பி பாய்ச்சலூர் பதிகம் என்ற பாடல்களை இயற்றியுள்ளார்.…

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை

தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் அடங்கியிருக்கின்றன. – ஆர். பாலகிருஷ்ணன் தமிழக வரலாற்றைப் புரிந்துகொள்வதில் தொல்லியலின் பங்கு பற்றி…

சிதறால் மலைக்கோவில்

சிதறால் மலைக்கோவில் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் அருமனை ஊர் அருகே சிதறால் மலை உள்ளது. இது குழித்துறையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் அமைந்த ஊர். கல்வெட்டுகளில் சிதறால் மலையைத் திருசாணத்து மலை என்று குறிக்கிறது. அது திருசாரணத்து மலை என்பதன் திரிபு. மலையின் உச்சியில்…

பாசனத் தொழில்நுட்பம்

பாசனத் தொழில்நுட்பம் : நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், பள்ளமும் மேடுமான நிலப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுவது எளிதல்ல. வீணாகும் நீரினை குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் தேக்கி வைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்துவது மழைக் காலங்களில் ஆபத்தானது. எனவே, நிலப்பரப்பியலின் கூறுகளை ஏற்றதாகப் பயன்படுத்தி நீரினை வேளாண்மைக்குப் பயன்படுத்த வேண்டும். காவிரிச் சமவெளி போன்ற நிலப் பகுதிகளில் நீரினைப்…

புதிதாக வெளிவந்த புத்தகங்கள்

1. தலித்துகள் பெண்கள் தமிழர்கள் – க. பஞ்சாங்கம் விலை: 425/- 2. பாணர் கைவழி எனப்படும் யாழ் நூல் – டாக்டர். ஆ.அ. வரகுணபாண்டியன் விலை: 250 /- 3. தனியாத் தீயின் நாக்குகள் – கமலாலயன் விலை: 160/- 4. சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் – ப்ரஜ்…

இந்திய நாட்டுச் சமயப்பிரிவுகள்

இந்திய நாட்டுச் சமயப்பிரிவுகள் இந்தியா என்ற நாடு புதிதாகவே ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் ஒரே நாடாக 1858-ல் இணைக்கப்பட்டது. பல மொழிகள், பல இனத்தவர் வாழும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்த நாடாக இந்தியா உருவானது. மாநிலங்கள் பலவற்றிலும் பல்வேறு சமயங்களும் இருந்தன. ஆயினும், இந்திய மரபு என்ற சொல்லத்தக்க உரிமை பெற்ற மதங்களாக சைவம், வைணவம், ஜைனம்,…

ஆசீவகர்கள் – பெயர்க் காரணம்

ஆசீவகர்கள் – பெயர்க் காரணம் ஆசீவகர்கள் எனத் தமிழ் நூல்களில் அழைக்கப்படும் இவர்கள் ‘ஆஜீவக‘ (Ajivika) என வடமொழியில் குறிப்பிடப்படுகின்றனர். ஆஜீவ (Ajiva) என்ற வடமொழிச் சொல், ஓர் வாழ்க்கை நெறிமுறை (mode of life), தொழில், இல்லறத்தோராயினும், துறவறத்தோராயினும் சேர்ந்து வாழும் ஒரு குழுவினர் என்ற பொருள்பட நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆசீவகர்கள் ஓர்…

நாட்டுப்புறத் தெய்வங்கள்

நாட்டுப்புறத் தெய்வங்கள்: நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு வழிபடுகின்ற கிராம தெய்வங்களே நாட்டுப்புற தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் அல்லது சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை நாட்டுப்புற மக்களின் காவல் தெய்வங்களாக நோய் நீக்கி நலம் மற்றும் வளம் தருபவையாகக் கருதி வணங்கப்படுகின்றன. வணங்கினால் நன்மையும் வணங்காவிட்டால் தீமையும் நேரிடும் என்ற நம்பிக்கையில் மக்களால்…