Category கட்டுரைகள்

ஈழவர் என்ற குழுவில் இருந்து உருவான சிங்களவர்

கட்டுரை முன்னோட்டம்: பண்டைய இலங்கை: ஓர் இனக்குழு அற்ற காலம்: கிமு 1000 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இன்று நாம் அறிந்த “இலங்கை” என்ற நாடு, “சிங்களம்” அல்லது “தமிழ்” என்ற மொழிகள், அல்லது “சிங்களவர்” அல்லது “தமிழர்” என்ற மக்கள் பிரிவுகள் எதுவும் இல்லை. வாழ்க்கை பழமையான நிலையில் இருந்தது. சிங்களவரின் தோற்றம்: சிங்களவர்கள்…

கரிகாலன் அமைத்த காவிரிக் கரையும் புதிய செய்தியும்

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில், திருச்சியில் இருந்து தஞ்சை செல்ல காவிரிக்கரை சாலையை விரும்பி பயணிப்பேன். இரண்டு புறமும் அடர்த்தியான மரங்கள் மிக இரம்மியமாக அப்பயணம் இருக்கும். ஆனால் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு அந்த மரங்கள் இன்று அழிக்கப்பட்டுவிட்டன. இம்மரங்களின் முக்கியத்துவம் பற்றியும், கரிகாலனும் தொலைநோக்கு சிந்தனை பற்றியும் தெலுங்கு சோழர் ஆவணம்…

தெலுங்குச் சோழர்கள் 4: இரேணாட்டுச் சோழர்கள் – தெலுங்குச் சோழர்களும் தெலுங்கு கல்வெட்டுகளும் தெலுங்கு இலக்கியங்களும்

இரேணாட்டுச் சோழர்கள் – தெலுங்குச் சோழர்களும் தெலுங்கு கல்வெட்டுகளும் தெலுங்கு இலக்கியங்களும் தமிழகத்தில் களப்பிரர்களின் ஆட்சி நடந்த காலகட்டத்தில், சோழர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர். இந்தச் சூழலில், சோழர் குலத்தைச் சேர்ந்த ஒரு வீரன், தமிழகத்துக்கு வடக்கேயுள்ள வடுக (தெலுங்கு) நாட்டுக்குச் சென்று, அங்கே ஒரு சிறு அரசாங்கத்தை நிறுவினார். அவர் நிறுவிய இந்த அரசு,…

தெலுங்கு சோழர் வரலாறு 1: சாளுக்கிய சோழரும், தெலுங்குச் சோழரும்

குலோத்துங்கனைத் தெலுங்கு சோழர் என்பார்கள் அது தவறு. குலோத்துங்க மன்னன் சோழ+சாளுக்கிய கலப்பு மரபில் பிறந்தவர். எனவே அவர் பின் வந்தோரை “சாளுக்கிய சோழர்” என்றே ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். தெலுங்கு சோழர் என்போர் கரிகாலன் காலத்திலிருந்தே தெலுங்கு நாட்டில் இருந்த சோழர்கள் என்றும், பல்லவ அரசர்களால் வடகிழக்கு பகுதிகளுக்கு சிதறடிக்கப்பட்டவர்கள் என்றும் கருதப்படுகிறது. காக்கத்தியர்களை பண்டைய…

தெலுங்கு சோழர் வரலாறு 2: தெலுங்கு (சோழ) குல காலன்

தெலுங்கு (சோழ) குல காலன் ராஜராஜச் சோழன் படத்தில் இந்த காட்சி வரும், கீழைச் சாளுக்கியரான விமலாதித்தனையும் (முத்துராமன்) எதிரிகளிடமிருந்து காப்பாற்றி மீண்டும் சோழர் ஆட்சியின் கீழ் ஆட்சி அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். அந்த எதிரி யார் என்பதை காண்போம். கீழைச் சாளுக்கியரின் கடைசி சுதந்திர அரசன் தானார்ணவ ஆவான். இவன் ஆட்சி ஏறி மூன்று ஆண்டுகள்…

தெலுங்கு சோழர் வரலாறு 3: தெலுங்கு ஆவணங்கள் கூறும் கரிகாலனின் முன்னோர் மற்றும் கல்வெட்டுகள் சொல்லும் வம்சாவளி செய்திகள்

புகழ்பெற்ற தஞ்சை சோழர்களான விஜயாலயச் சோழர்களுக்கும், தெலுங்குச் சோழர்களுக்கும் நேரடித் தொடர்பில்லை. தெலுங்குச் சோழர்களின் வம்சம் இரண்டாம் கரிகாலன் மற்றும் தசவர்மன் ஆகிய இரண்டு கிளைகளாகப் பிரிவதாகவும், அவர்களது கல்வெட்டுகளே இதற்கு வலுவான சான்றுகள் என்பதையும் கட்டுரை தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, ஜடா சோழன், கரிகாலன், மகிமான சோழன் (மாவன் கிள்ளி), கரிகாலன் II, தசவர்மன், தொண்டைமான்…

சாவா மூவா பேராடு தெரியும் அதென்ன சாவா மூவா பெரும்பசு?

பல திருக்கோயில்களில் சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரியும் நிலையில் உள்ள சிற்பங்களைக் காணலாம். இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்யவும், ‘பால் அமுது’ படைக்கவும் பசுக்கள் தானமாக அளிக்கப்பட்டதை பல திருக்கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. திருவரங்கம் கோயிலில் பெருமாளுக்குப் பால் அமுது சமர்ப்பிக்க 100 பசுக்கள் தானமாக அளிக்கப்பட்ட செய்தியை அக்கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. முதலாம்…

தமிழும் ஆரியமும் (வடமொழியும்) கலந்த காலம்

பாண்டிய மன்னர்கள் தொடர்பான ஏழு செப்பேடுகள் இதுவரை பாண்டிய நாட்டிலேயே கிடைத்துள்ளன. இச்செப்பேடுகள் பாண்டிய மன்னர்களின் வரலாற்றையும், அக்கால சமூக, கலாச்சாரச் சூழலையும், மொழிகளைப் பற்றியும் தெளிவாக புரிந்துகொள்ள உதவுகின்றன. அவை: 1. மாறவர்மன் அரிகேசரி காலம்: இளையான்புத்தூர் செப்பேடு 2. ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையன் காலம்: வேள்விக்குடி, சீவரமங்கலம், சின்னமனூர் (சிறிய செப்பேடு) 3.…

கல்யாண மகால்: நாயக்கர் கால செஞ்சியின் கம்பீர அடையாளம்

செஞ்சிக் கோட்டையில் அமைந்துள்ள கட்டிடங்களிலேயே பார்வையாளர்களை உடனடியாக ஈர்க்கக்கூடியதும், மிக உயர்ந்து நிற்பதுமான கட்டிடம் கல்யாண மகால் ஆகும். இது ராணி மகால் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டிடம் அரசியின் அரண்மனையாகப் பயன்பட்டது. ராஜகிரி கோட்டைக்குள் அமைந்துள்ள கல்யாண மண்டபம், ஒரு தனித்துவமான அமைப்பு. அதன் கட்டிடக்கலைப் பாணி, விஜயநகர காலத்தின் சிறப்பியல்பு மண்டப (pavilion)…

கணக்குபிள்ளையும் சித்திரகுப்த நயினாரும்

சித்திரை மாதம் முழுநிலவு நாளில் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான வீட்டு விழாக்களில் ஒன்று சித்திரகுப்த நயினார் நோன்பு. குறிப்பாக, ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளிலும், நிலவுடைமைச் சமூகத்தினராலும், வணிகச் சமூகத்தினராலும் இந்த நோன்பு மிகுந்த ஆர்வத்துடன் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறு நிலவுடைமைச் சமூகத்தினரும் சில இடங்களில் இதை அனுசரிக்கின்றனர். இந்த நோன்பின் முக்கிய அம்சம், சித்திரை முழுநிலவு இரவில்…